Monday, July 3, 2017

தமிழ்நாடு

1. குடியரசுத் தலைவர் தேர்தல் எம்.பி.- க்கள், எம்எல்ஏ- க்களுக்கு வண்ண வாக்குச் சீட்டு!!!
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை வண்ணத்திலும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஊதா நிறத்திலும் வாக்குச்சீட்டு தரப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

2. டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு!
தமிழகக் காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
தமிழகக் காவல்துறையின் உளவுப்பிரிவு டி.ஜி.பி.யாக தே.க.ராஜேந்திரன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது அவர், தமிழகக் காவல்துறையின் முக்கியப் பதவியான சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. பணியைக் கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பார் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், ராஜேந்திரன், ஜூன் மாதம் 30-ஆம் தேதியோடு ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால், ராஜேந்திரனுக்கு இரு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு மத்திய உள்துறையின் அனுமதியும், மத்திய தேர்வாணையத்தின் அனுமதியும் பெறுவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசின் உள்துறையும், மத்திய தேர்வாணையமும் ராஜேந்திரனுக்கு இரு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு அனுமதி வழங்கியது.
ஏற்கெனவே டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வு பெற்ற ராமானுஜம், அசோக்குமார் ஆகியோர் இதேபோல ஓய்வு பெறும் நாளில் இரு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு பெற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இப்போது ராஜேந்திரன் மூன்றாவது டி.ஜி.பி.யாக இரு ஆண்டுகள் பதவி நீட்டிப்புப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பணிக்காலம் வரும் 2019- ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.


இந்தியா

1. அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி: 70 ஆண்டுகால வரிவிதிப்பு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி!!!
சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) நடைமுறை நாடு முழுவதும் ஜூலை 1 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த வரிவிதிப்புக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதிலும் ஒரே சீரான வரிவிதிப்பு முறை வழக்கத்துக்கு வந்துள்ளது.

2. அட்டர்னி ஜெனரலாகிறார் கே.கே. வேணுகோபால்!
அட்டர்னி ஜெனரலாக (மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர்) நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோ பால் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.
முன்னதாக, இப்பொறுப்பில் இருந்த முகுல் ரோத்தகி தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
86 வயதாகும் வேணுகோபால் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அண்மையில் அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் அத்வானி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் சார்பில் வேணுகோபால் ஆஜரானார்.

3. தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைத்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு
தொழில் தாவா வழக்குகளுக்கான தீர்ப்பாயம், கடன் வசூலிப்பு தீர்ப்பாயம் உள்பட மொத்தம் 27 தீர்ப்பாயங்கள் இருந்தன. இதில், 8 தீர்ப்பாயங்களை இழுத்து மூடிவிட்டு, அதை மீதமுள்ள 19 தீர்ப்பாயங்களுடன் இணைத்து மத்திய அரசு சட்டமசோதாவை தாக்கல் செய்தது. இதில் நிதி தொடர்பான தீர்ப்பாயங்களும் உள்ளன.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கும், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் இந்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்புக்கும் எதிராக உள்ளது. நிதி தொடர்பான சட்டமசோதாவுக்கு டெல்லி மேல்- சபையில் ஒப்புதல் பெறாமல், சட்டமாக்கப்பட்டுள்ளதால், இதற்கு தடைவிதிக்க வேண்டும். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.


உலகம்

1. நுண்ணறிவுத் திறன் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் சாதனை:
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் அர்னவ் சர்மா, மென்சா நுண்ணறிவு போட்டியில் (ஐக்யூ) 162 புள்ளிகளைப் பெற்று உலகிலேயே அதிக அறிவு திறன்மிக்க விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளினான். இதன்மூலம் உலகின் அதிக அறிவுக் கூர்மை பெற்ற முதல் சிறுவனாக விளங்குகிறான்.


விளையாட்டு

1. சிறுவயது தோழியை கரம்பிடித்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி
பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தனது சிறுவயது தோழி அண்டோனல்லா ரோகுசோவை நேற்று திருமணம் செய்து கொண்டார்


முக்கிய நியமனங்கள்

1. இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நீடிப்பார்: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!!!
இந்திய "ஏ" மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிய இருந்த நிலையில் அவர் மேலும் 2 ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.


அறிவியல் தொழில்நுட்பம்

1. புதிய இணைய வைரஸ்: பொருளாதார அழிவை ஏற்படுத்துவதே நோக்கம்
கணினிகளின் செயல்பாட்டை முடக்கும் புதிய வகை ரான்சம்வேர் இணைய வைரஸ் உலகின் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கணினிகளையும் முக்கிய அமைப்புகளின் மின்னணு சேமிப்பகங்களையும் ஊடுருவித் தாக்குவதன் மூலம், அதிகபட்ச பாதிப்பையும் பொருளாதார அழிவையும் ஏற்படுத்துவதே உண்மையான நோக்கம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் அமைந்துள்ள சர்வதேச சரக்குப் போக்குவரத்துக் கப்பல் நிறுவனம் மேர்ஸ்க், மருந்து நிறுவனம் மெர்க், பிரபல கூரியர் நிறுவனமான ஃபெடரல் எக்ஸ்பிரஸ் இணைய வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. ரஷியா, ஜெர்மனியில் பல நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. மின் கட்டமைப்புகள் முடங்கின. உக்ரைனில் ஏ.டி.எம்.கள், விமானப் போக்குவரத்து சேவை உள்ளிட்டவை இணைய வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகின.
உக்ரைனில் வங்கிகளின் கணினி சேமிப்பகங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. வங்கி சேவைகளை விரைந்து வழங்க முடியவில்லை.


முக்கிய நாட்கள் / வாரங்கள்

1. இன்று தேசிய டாக்டர்கள் தினம்
சமூகத்திற்காக நேரம், காலம் பார்க்காமல் மருத்துவ சேவையாற்றுபவர்கள் டாக்டர்கள். உயிரை காப்பாற்றும் உன்னத பணியை செய்வதால், கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகின்றனர். இவர்களது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜூலை 1ல், தேசிய டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2. கல்பனா சாவ்லா பிறந்த தினம்: ஜூலை 1- 1961.
இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபி குடும்பத்தில் 1961-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் "கற்பனை" என்று பொருள்.
கல்பனா மார்ச் 1995-ல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1996-ம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19-ம் நாள், 1997-ம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984-ல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மயில்கள் கடந்து பூமியைச் சுற்றி சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்துள்ளார்.
1991-1992-ல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாய் அமைந்தது.
STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியது. அதில் கல்பனா சாவ்லா உயிர் இழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் பொருட்டு நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.


பொருளாதாரம்

1. புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
இந்தியாவின் தேசிய ஆவண காப்பகத்தின் 125-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளது. இந்த புதிய நாணயத்தின் மத்தியில் அசோகா தூணில் சிங்க முகமும், அதற்கு கீழ் சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் பாரத் என்று தேவநாகரியிலும், வலது பக்கம் இந்தியா என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். சிங்கமுகத்தின் கீழ் பகுதியில் ரூபாயை குறிக்கும் குறியீடும், மதிப்பிலக்கம் 10 என்பது எண்ணிலும், நாணயத்தின் மறுபக்கம் தேசிய ஆவண காப்பக கட்டிடத்தின் உருவப்படம் மத்தியிலும், உருவப்படத்தின் கீழே 125 என்று ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.


நடப்பு நிகழ்வுகள் – 01 ஜூலை 2017

தமிழகம்

1.தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் உபயோகிப்பாளர்களுக்கு எளிதில் கிடைத்திட ஏதுவாக ‘தமிழ்நாடு மணல் இணைய சேவை’ http://www.tnsand.in இணையதளத்தையும், tnsand என்ற
செல்லிடப்பேசி செயலியையும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

இந்தியா

1.54வது மிஸ் பெமினா இந்தியா ( 2017) போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த மனுஷி சாலார் பட்டம் வென்றுள்ளார்.ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த சனா துவா 2வது இடமும், பீகாரின் பிரியங்கா குமாரி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.மிஸ் ஆக்டிவ் கிரீடம் விருது வினைல் பட்நாகர் பெற்றுள்ளார்.உடல் அழகிய சிறப்பு விருது வெமிகா நித்தி பெற்றுள்ளார்.

உலகம்

1.கூகுள் நிறுவனம், தனது தேடல் வசதி மூலம் (search engine) கிடைக்கும் தேடல் முடிவுகளில், தனது சந்தை ஒப்பிட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது 2.42 பில்லியன் யூரோ அபராதத்தை, ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ளது.

2.அமெரிக்காவின் பயோகார்பன் இஞ்சினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த சூசன் கிரஹாம் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் ஆண்டுக்கு 100 கோடி மரங்களை நடும் ஆளில்லா விமானத்தை உருவாகியுள்ளனர்.

விளையாட்டு

1.லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஆராய BCCI சார்பில் , ராஜிவ் சுக்லா (IPL தலைவர்) தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

2.வெனிஸ் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான உலக கட்டழகி பட்டத்தை, இந்தியாவின் பூமிகா சர்மா வென்றுள்ளார்.உலக கட்டழகி போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை, பூமிகா சர்மா அடைந்துள்ளார்.

இன்றைய தினம்

1.1843 – மதராஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

2.1874 – முதலாவது வர்த்தகரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.

3.1890 – கனடாவும் பெர்முடாவும் தந்திச் சேவையில் இணைந்தன.

4.1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

5.1931 – யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.

6.1932 – ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.

7.1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.


உலக செய்திகள் :
அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்து சென்று அந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த பிற நாட்டவர்களுக்கு  அந்த நாட்டின் சுதந்திர தினத்தன்று “மாபெரும் இடம் பெயர்ந்தோர் விருது” வழங்கி சிறப்பிக்கஉள்ளனர். மொத்தம் 39 தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இதில் இரண்டு பேர் இந்திய வம்சாவழியினர் ஆவார்கள்.

தெற்கு அமெரிக்கா நாடான சிலியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே ஆப்ரேஷன் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாயின. இக்காட்சி அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கியை கைக்கொள்ளலாம். இதனால் கல்லூரி வளாகத்தில் ஏற்படும் துப்பாக்கி சூட்டை தடுக்கலாம் என்று அமெரிக்காவின் சிகாகோ மாநில அரசு தெரிவித்துள்ளது.


உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி அணு ஆயுதம் தயாரித்து சோதனை மேற்கொள்ளும் வட கொரியா மீது காட்டிய பொறுமையை அமெரிக்கா இழந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்தால் தமிழக படகு உரிமையாளர்க்கு ரூ.20 இலட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என்று இலங்கை மீன்வளத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.


ஐ.நா அமைதி மேம்பாட்டு நிதியத்துக்கு இந்தியா மேலும் 5 இலட்சம் டாலர்(சுமார் 32 கோடி) நிதி வழங்கியுள்ளது.இத்தகைய பங்களிப்பு உலக  நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய இராணுவத்தை திரும்ப பெறப்பட்ட பிறகே அந்நாட்டுடன் பேச்சவார்த்தை என்று சீனா அரசு தெரிவித்துள்ளது.


தேசிய செய்திகள் :

ஆதார் பான் எண் (நிரந்தர கணக்கு எண்) ஆகியவற்றை இணைப்பதற்கு ஒருபக்க பாரத்தை பூர்த்தி செய்து அனுப்பும் புதிய நடைமுறையை வருமான வரித்துறை அறிமுகப்படித்தியுன்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் மண்டியா மாவட்டத்தில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சரக்கு சேவை மற்றும் ஜி.எஸ்டி வரி விதிப்பு முறையால் இந்தியாவின் பொருளாதாரத்தி;ல் முன்னேற்றம் ஏற்படும் என்று உத்தரகண்ட்   மாநில பா.ஜ.க. முன்னாள் எம்.பி தருண் விஜய் தெரிவித்துள்ளர்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்குவது 45 சதவீதம் குறைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சரக்கு சேவை வரி நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் சில குறிப்பிட்ட உதிரி பாகங்களுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும்படி பிரிவினைவாதிகள் தூண்டிவிடுவதாக அஜ்மீர் தர்கா தலைமை மதகுரு ஜெய்னுல் அபேதின் அலிகான் குற்றஞ்சாட்டுகிறார்.

இந்திய பெற்றோர்கள் தங்கள்  குழந்தைககளின் படிப்பிற்கு (தொடக்கக்கல்வி முதல் இளங்களை பாடம் வரைக்கும்)  ரூ.12.22 லட்சம் செலவு செய்கிறார்கள் என எச்.எஸ்.பி.சி நடத்திய கல்வி மதிப்பு என்ற ஆய்வில் தெரியவருகிறது.

2022 ஆம் ஆண்டு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாடு தன்னிறைவு பெற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

விளையாட்டு செய்திகள்:

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3–வது ஒருநாள் போட்டியில் தோனியின் அரைசதத்தினாலும் ஸ்பின்னர்களினாலும் இந்திய அணி 251 ரன்கள் இலக்கே வெற்றியாக மாறியது என்று தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏ அணியின்  பயிற்சியாளரான ராகுல் ராவிட் ஊதியம் ரூ.2.5 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்ந்துள்ளது.

புவனேஷ்வரில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டியில் 95 பேர் கொண்ட  இந்திய அணி கலந்து கொள்ள போவதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

மெக்சிகோவின் பலவீனமான துடுப்பு உத்தியை சரியாக பயன்படுத்திய  ஜெர்மணி கான்பெடரேஷன் கோப்பை அரையிறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியில் சிலி அணியை சந்திக்க உள்ளது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்மிரிதி மந்தனா அதிரடி சதத்தால் மேற்கிந்திய தீவுகளை வீழத்தி வெற்றி பெற்றது இந்திய அணி.


இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இன்று(02—7-2017) மோதி கொள்கின்றன.

வர்த்தக செய்திகள்:


உணவு தானியங்கள் பால் தயிர் முட்டை இதர பால் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலைகள் குறைக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் சில குறிப்பிட்ட உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள மின்சாரம் உரம் சிமென்ட் கச்சா எண்ணெய் நிலக்கரி உள்ளிட்ட 8 துறைகளின் உற்பத்தி  வளர்ச்சியில் 3.6 சதவீதம் சரிவு ஏற்ப்படுள்ளது.

மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவீதமாக குறைத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸ{கியின் இந்தியாவின் கார் விற்பனை சென்ற ஜுன் மாதத்தில் 7.6 சதவீதம் அதிகரித்தது.

சி.எஸ்.எஸ் நிறுவனத்தின்  முதல் நாள்; வர்த்தகம் நேற்று தொடங்கியது. முதல் நாள் வர்த்தகத்திலே 75 சதவீதம்  வih உயர்வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லாபம் இல்லாமல் ஏர் இந்தியாவை வாங்க மாட்டோம் என்று பணியாளர்களுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சிஇஒ ஆதித்யா கோஷ் வாக்குறுதி அளித்துள்ளார்.

🔵  *#அறிவிப்பு*

*குரூப் 4 -  இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி*

*தட்டச்சர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 முதல் 30ம் தேதி வரை நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி*

*சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-6 வரை கலந்தாய்வு நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி*

*கலந்தாய்வுக்கான விவரங்களை  http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்*

நடப்பு நிகழ்வுகள் – 03 ஜூலை 2017

இந்தியா

1.ஐ.நா. வரி நிதியத்திற்கு (U.N. Tax Fund) உலகிலேயே முதல் நாடாக இந்தியா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது.

2.தெலுங்கானா மாநிலம், ராச்சகொண்டா பகுதியில் பணியாற்றும் மகேஷ் முரளி பகவத் IPS அவர்களின் சிறப்பான செயல்பாடுகளுக்காக அமெரிக்காவின் ஹீரோ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

3.நாட்டில் முதல்முறையாக ஒடிஷா மாநிலத்தில் கால்நடைகளுக்கான ரத்த வங்கி தொடங்கப்பட இருக்கிறது.

உலகம்

1.லண்டனில் நடைபெற்ற ஏழாவது ஆசியன் விருதுகளில், ஹைதராபாத்தை சேர்ந்த Intellecap என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிஷா தத் “சிறந்த சமூக தொழில் முனைவர் விருது – 2017” (Social Entrepreneur of the Year) பெற்றுள்ளார்.

2.2019-ம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக புத்தக தலைநகரமாக ஷார்ஜா (ஐக்கிய அரபு எமிரேட்) அறிவிக்கப்பட்டுள்ளது.2018-ம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக புத்தக தலைநகரமாக ஏதென்ஸ் அறிவிக்கப்பட்டிருந்தது.2017-ம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக புத்தக தலைநகரமாக கோனகிரே அறிவிக்கப்பட்டிருந்தது.

3.உலகப் புகழ் பெற்ற, அமெரிக்காவின் Massachusetts Institute of Technology (MIT)யின் டீனாக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஆனந்த சந்திரசேகர் (தமிழர்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4.உலகிலேயே மதம் தொடர்புடைய முதல் பொழுதுபோக்கு பூங்கா அர்ஜென்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் நகரில் டியரா சான்டா (Tierra Santa) என்ற பெயரில் உருவாக்க்ப்பட்டு உள்ளது.

5.முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் டன் எடை கொண்ட போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய அதிநவீன போர் கப்பலை (Type 055) தனது நாட்டு கடற்படைக்கு சீனா அர்ப்பணித்துள்ளது.

 தமிழ்நாடு

1. பின்னலாடை தொழிலின் பெருமை கூறும் வகையில், திருப்பூர் மாணவர்கள் வரைந்த, டூடுல் ஓவியம், லிம்கா சாதனைக்கு தேர்வாகியுள்ளது.

2. அப்துல் கலாமின் இணையதளம் நாட்டுக்கு மறுஅர்ப்பணிப்பு!!!
அப்துல் கலாமின் இணையதளம் சாதாரண குடிமக்களால் நாட்டுக்கு மறுபடியும் அர்ப்பணிக்கப்பட்டது.
சாதனை இந்தியர்களை அறிந்துகொள்வதற்காக www.billionbeats.in (நூறு கோடிதுடிப்புகள்) என்ற இணையதளத்தை குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கி நடத்திவந்தார். இதில், புதியன செய்து சமூக வளர்ச்சிக்கு பங்காற்றிய சாதனையாளர்கள் அறிமுகம், தனது பேச்சுகள், சிந்தனைகள், கேள்வி மற்றும் பதில்களையும் அப்துல் கலாம் வெளியிட்டு வந்தார். இந்த இணையதளம் சில காரணங்களால் செயல்படாமல் முடங்கி கிடந்தது.
இந்த நிலையில், அப்துல் கலாமின் மறைவுக்கு பின்னர் அவரது பேத்தியும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞருமான நாகூர் ரோஜா இணையதளத்தை மீண்டும் செயல்படுத்தியிருக்கிறார்.
சாதாரணகுடிமக்களான ராணி (வீட்டுப் பணியாளர்), ராஜேஸ்வரி (அடுக்குமாடி உதவியாளர்), செந்தில்(கட்டடத் தொழிலாளர்), பெஞ்சில்யன் (அலுவலக உதவிபையன்), சரோஜா (பள்ளி ஆயாம்மா) ஆகிய சாதாரணமானவர்களே இணையதளத்தை அர்ப்பணித்தனர்.
இணையதளத்தில் 34 ஆண்டுகளில் 140 முறை ரத்த தானம் வழங்கிய காஷ்மீரை சேர்ந்த ஷபிர் உசேன்கான், மதுரை ரயில் நிலைய சுமையாளர் சுந்தர், மைசூரைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற மஞ்சுநாதா உள்ளிட்டோரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. எனது கனவின் இந்தியா என்ற தலைப்பிலான பகுதி பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

3. ஆன்-லைன் மணல் விற்பனைக்கு வரவேற்பு: 2 நாட்களில் 18 ஆயிரம் பேர் முன்பதிவு
தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் மணல் பெறும் வகையிலும், மணலுக்காக லாரிகள் காத்திருப்பதை தடுக்கவும் குவாரிகளில் மணல் அள்ள ‘ஆன்-லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக தமிழ்நாடு மணல் இணையதள சேவை ( www.tnsa-nd.in ) என்ற புதிய இணையதளம், மொபைல் ‘ஆப்’-பை கடந்த மாதம் 28-ந்தேதி அவர் தொடங்கி வைத்தார்.

4. கிராம மக்கள் - ஆசிரியர்கள் கூட்டு முயற்சி: வேகமாக வளர்ந்து வரும் விளக்குடி அரசு தொடக்கப் பள்ளி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியம் விளக்குடி கிராமத் தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலேயே புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகமாக நடைபெற்ற தொடக்கப் பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் மொத்தம் 207 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 52 பேர் இந்த ஆண்டு புதிதாகச் சேர்ந்தவர்கள். பிற அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை என்பது கடும் சவாலாக மாறியுள்ள சூழலில், விளக்குடி பள்ளியில் அதிக மாணவர்கள் சேருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ்வழி வகுப்புகள் மட்டுமே நடை பெறுகின்றன. ஒவ்வொரு பாடத்தின் மைய நோக்கத்தையும் மாணவர்களுக்கு புரிய வைத்திட வேண்டும் என்பதில் இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மிகத் தீவிரம் காட்டுகின்றனர். அதற்காக எளிதாக கற்பிக்க உதவும் ஏராள மான துணைக் கருவிகளை பயன் படுத்துகின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் துணைக் கருவிகள் வழங்கப்படுகின்றன. அது தவிர இந்தப் பள்ளி ஆசிரியர்களே சொந்த முயற்சியில் பல துணைக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிகளுக்கு ஆசிரியர் பயிற்றுநர் ந.காளிதாஸ் உறுதுணையாக உள்ளார். புதிய புதிய கற்பித்தல் உத்திகளைக் கூறும்போது, நம்மால் முடியாது என்று தட்டிக்கழிக்காமல், வகுப்பறையில் செய்து பார்க்கலாமே என்பதில் இந்தப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆசிரியர்களின் இந்த ஆர்வமும், முனைப்பும்தான் இந்தப் பள்ளியை இன்று முன்மாதிரிப் பள்ளியாக மாற்றியுள்ளது. இவ்வாறு காளிதாஸ் கூறினார்.


இந்தியா

1. இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா கடற்படைகள் கூட்டுபயிற்சி!!!
இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜூலை 10ஆம் தேதி இருந்து கடற்படையின் கூட்டுப் போர்ப்பயிற்சி நடைபெறும் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் 10 நாட்களுக்கு இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சி நடைபெறும் எனவும் இதில், கலந்து கொள்வதற்காக இந்திய போர்க்கப்பல்கள் கடற்படைக்கு வர உள்ளன என தெரிய வந்துள்ளது.

2. மருந்து பொருட்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை ஜி.எஸ்.டி வரி விலக்கு
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மருந்து கடை விற்பனையாளர்கள் வாங்கி வைத்துள்ள அத்தியாவசிய மருந்துகளை பழைய விலையிலேயே விற்கலாம் என்றும் வாங்கி வைத்த சரக்குகள் விற்று தீர்ந்த உடன், வாங்கும் புதிய சரக்குகளை ஜிஎஸ்டி., வரியுடன் விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3. விரைவில் 3 ஆயிரம் ரெயில் நிலையங்களில் வை-பை வசதி செய்யப்படும்: மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு
கோவை: கோவை ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே திட்டங்களின் தொடக்க விழா நடந்தது. மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தலைமை தாங்கி பேசியதாவது:- தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த தொகை அதிகமாகும். சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டங்களை நிறைவேற்றும்போது தமிழ்நாட்டுக்கு மேலும் கூடுதல் பலன் கிடைக்கும். சென்னை-பெங்களூரு இடையே அதிவேக ரெயில்களை இயக்கும் திட்டம் நிறைவுபெறும்போது, தென்இந்தியாவுக்கு கூடுதல் நன்மையை அளிக்கும்.

4. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேஸ்ட்ரோ கார்டுகளுக்கு தடை - புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ள அறிவிப்பு
31-ந்தேதி முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேஸ்ட்ரோ கார்டுகளுக்கு தடை விதித்து உள்ளதாகவும் புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5. ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கலுக்கு எளிமையான படிவம் அறிமுகம்
ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்ய எளிமையான படிவம் ஒன்றை ஜி.எஸ்.டி. நெட்வொர்க் அறிமுகம் செய்துள்ளது. இதை ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவரங்களை பூர்த்தி செய்து, ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதிக்கு முன்பு, அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

6. பெண்களின் பாதுகாப்புக்காக தில்லி காவல்துறை அறிமுகப்படுத்திய "ஹிம்மத் செயலி" மேம்படுத்தப்பட்ட வடிவில் விரைவில் மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.


உலகம்

1. சுவிஸ் வங்கியில் அதிக பணம் வைத்திருப்போர் பட்டியல்: 88-ஆவது இடத்துக்குச் சென்றது இந்தியா!!!
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் அதிக பணம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 88-ஆவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் பிரிட்டன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
சுவிஸ் வங்கிகளில் அதிகாரப்பூர்வமாக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் மொத்தப் பணத்தில் இந்தியர்களின் பணம் 0.04 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதன்படி சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.4,500 கோடி உள்ளது.
சுவிஸ் வங்கிகளில் அதிக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் 2014-ஆம் ஆண்டு இந்தியா 61-ஆவது இடத்திலும், 2015-ஆம் ஆண்டு 75-ஆவது இடத்திலும் இருந்தது. 2007 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முதல் 50 இடங்களில் இந்தியா இருந்தது. அதிகபட்சமாக 2004-ஆம் ஆண்டில் 37-ஆவது இடத்தில் இருந்தது.

2. அமெரிக்கா வரும் அபுதாபி விமானங்களில் லேப்டாப் தடை நீக்கம்
அபுதாபியில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் விமானங்களில் லேப்டாப் எடுத்து வர விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

3. சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறைக்கு தடை: இலங்கை முடிவு!!!
கடலில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி, மீன்பிடிக்கும் முறைக்கு தடை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை முறையற்ற வகையிலும், சட்டவிரோதமான முறையிலும் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருப்பதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டி வருகிறது. இலங்கையில் இருந்து மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பு தடையும் விதித்திருந்தது. இந்தத் தடையை கடந்த ஆண்டுதான் ஐரோப்பிய யூனியன் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

4. குழந்தைகளின் இளங்கலை பட்டப்படிப்பு வரை: ரூ.12 லட்சம் செலவிடும் இந்திய பெற்றோர்கள்
தொடக்க கல்வி முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சராசரியாக ரூ.12.22 லட்சம் வரை செலவு செய்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே சமயம் உலக சராசரியை விட இந்த தொகை மிகவும் குறைவு என கூறப்பட்டுள்ளது. ஹெச்எஸ்பிசி வங்கி சார்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஹாங்காங், இந்தோனேஷியா, மெக்சிகோ, சிங்கப்பூர், தைவான், பிரிட்டன், அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் உள்ள 8,481 பெற்றோர்களிடம் கல்வியின் மதிப்பு என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் கல்விக்காக அதிகம் செலவழிக்கும் நாடுகள் எது என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் வரிசைப்படுத்தப்பட்ட முதல் 15 இடங்களில் இந்தியாவுக்கு 13-வது இடம் கிடைத்துள்ளது. தொடக்க கல்வி முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை இந்திய பெற்றோர்கள் சராசரியாக ரூ.12.22 லட்சம் செலவு செய்கின்றனர்.


விளையாட்டு

1. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான அம்பயர்கள் அறிவிப்பு
2017 - 2018-ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான எலைட் பிரிவு அம்பயர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து சுந்தரம் ரவி மட்டும் இடம்பெற்றுள்ளார்.அலீம் தர், குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மஸ், கிரிஸ் கபானே, இயான் குல்ட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சார்ட் கெட்டில்பொரோ, நிகெல் லாங், புரூஸ் ஓக்சென்போர்ட், பால் ரீபில், ராட் டக்கர் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


அறிவியல் தொழில்நுட்பம்

1. சந்திராயன்-2 செயற்கைக்கோள் 2018- ம் ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்படும்!!!
சந்திராயன்-2 செயற்கைக்கோள் 2018- ம் ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண்குமார் கூறியுள்ளார்.
தனியார் நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில் ஈடுபடும்.
விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விடாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

2. வியாழன் கோளில் மேகக் கூட்டம்:
சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் கோளின் (ஜூபிடர்) வளிமண்டலத்தில் ஒளி மற்றும் இருள் மேகங்கள் சூழ்ந்து இருக்கும் அரிய புகைப்படத்தை நாசாவின் ஜெமினி தொலைநோக்கி எடுத்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் வியாழனில் பெரிய அளவிலான சிவப்பு நிறப் (வெப்பம் அதிகமாக உள்ள) பகுதிகள் நிறைந்த படங்களே அதிகமாக இருந்தன. சூரிய மண்டலத்தில் 5-வது கோளாக உள்ள வியாழன் மற்ற கோள்களை விட மிகவும் பெரியது. இது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது ஆகும். இந்தக் கோளை ஆய்வு செய்வதற்காக நாசாவால் அனுப் பப்பட்டுள்ள ஜூனோ விண்கலம் அரிய புகைப்படங்களை எடுத்து தொடர்ந்து அனுப்பி வருகிறது.

நடப்பு நிகழ்வுகள் – 29 ஜூன் 2017

நடப்பு நிகழ்வுகள் – 29 ஜூன் 2017

இந்தியா

1.புதிய தேசிய கல்விக் கொள்கையை வரையறுக்க முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகம்

1.ஜப்பான் நாட்டின் சுற்றுச்சூழல் விருதை இந்தியாவின் வேளாண் நுண்ணுயிர் விஞ்ஞானி டாக்டர். ஶ்ரீஹரி சந்திரஹட்கி (Dr. Shrihari Chandraghatgi) பெற்றுள்ளார்.

விளையாட்டு

1.மங்கோலியாவில் நடந்த உலான்பாதர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அன்குஷ் தாஹியா, கொரியாவின் சோய் சோல்-ஐ வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

2.ஹாலே ஓபன் டென்னிஸ் (ஜெர்மனி) தொடரின் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்,ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்-ஐ 6-1, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்து 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

3.இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை கவிதா தேவி , World Wrestling Entertainment (WWE) போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

4.உலகின் மிக கடுமையான சைக்கிள் போட்டி என கருதப்படும் Race Across America போட்டியில், 4,900 கிலோ மீட்டர் தூரத்தை 11 நாட்கள் 18 மணி 45 நிமிடங்களில் கடந்து இந்தியாவின் ஸ்ரீனிவாஸ் கோகுல்நாத் ஏழாவது இடத்தை பிடித்தார்.கோகுல்நாத்தை தொடர்ந்து வந்த மற்றொரு இந்தியர் டாக்டர் அமீத் சமார்த்தும் இந்த தூரத்தை வெற்றிகரமாக முடித்தார். இவருக்கு 8வது இடம் கிடைத்தது.இப்போட்டியின் கடந்த 30 ஆண்டு கால வரலாற்றில் 3 இந்தியர்களே இதில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் எவரும் போட்டியை முடிக்கவில்லை

இன்றைய தினம்

1.1975 – ஸ்டீவ் வாஸ்னியாக் முதலாவது ஆப்பிள் கணினியை சோதித்தார்.

2.2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐ-போன் செல்லிடபேசியை அறிமுகப்படுத்தியது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

1. 1,330 திருக்குறள் ஒப்புவித்து 5 வயது மாணவி சாதனை
சிறுவங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கனிஷ்கா, திருக்குறளில் உள்ள, 1,330 குறள்களையும் ஒப்புவித்து, சாதனை படைத்து வருகிறார். மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான, திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில், 100க்கும் மேற்பட்ட சான்றுதழ்கள், பதக்கங்களையுள் பெற்றுள்ளார்.


இந்தியா

1. 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மத்திய அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை அவர்கள் பணியில் சேர்ந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு, 25 ஆண்டுகளுக்கு பிறகு என இருமுறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் செயல்பாடுகளை மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறை சமீபத்தில் ஆய்வு செய்தது. 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


உலகம்

1. ஆஸ்திரேலியாவில் குடியேறிய வெளிநாட்டினர்: இந்தியர்கள் இரண்டாவது இடம்!
ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 2.44 கோடி ஆகும். இது, கடந்த 2011-இல் சுமார் 2.15 கோடியாக இருந்தது. தற்போதைய மக்கள்தொகையில் சுமார் 26 சதவீதம் பேர் தாய் மண்ணில் அல்லாது வெளிநாடுகளில் பிறந்தவர்கள் ஆவர்.
மொத்த மக்கள்தொகையில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தவகையில், ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டினரில் சுமார் 1.91 லட்சம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். அடுத்து சுமார் 1.63 லட்சம் பேருடன் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2011 முதல் இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2. பிரேஸில் அதிபர் மீது அட்டர்னி ஜெனரல் ஊழல் புகார்!
பிரேஸில் அதிபர் மிஷெல் டெமர் மீது அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் ஊழல் புகார் பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, அதிபருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது ஊழல் வழக்கு தொடுப்பதற்குப் போதுமான ஆதாரம் இருப்பதாக வாக்களித்தால், அவர் இடை நீக்கம் செய்யப்படுவார். ஆறு மாதங்களுக்குள் அவர் மீதான கிரிமினல் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். அது வரையில் அவர் பதவியில் தொடர முடியாது.
அவருக்கு முன்பு அதிபராக இருந்த டில்மா ஊழல் குற்றச்சாட்டின்பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மிஷெல் டெமர், கடந்த ஆண்டு அதிபர் ஆனார். தற்போது அவர் மீதும் ஊழல் புகார் எழுப்பப்பட்டுள்ளது.
ஆனால், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை அதிபர் மிஷெல் டெமர் நிராகரித்தார்.


விளையாட்டு

1. இரட்டைப் பட்டங்களுக்கான போட்டி: சீன வீரரை எதிர்கொள்கிறார் விஜேந்தர் சிங்!
போட்டியைப் பொறுத்த வரையில் வெற்றி பெறும் நபர் தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதுடன், தோல்வியடைந்த நபரின் பட்டத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
இப்போட்டி மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள என்எஸ்சிஐ விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.
டபிள்யூபிஓ ஆசிய பசிபிக் மிடில்வெயிட் சாம்பியனான விஜேந்தர் சிங், இதுவரை மோதிய 8 போட்டிகளில் தோல்வியின்றி தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதில் 30 சுற்றுகளும், 7 நாக் அவுட் வெற்றிகளும் அடங்கும். டபிள்யூபிஓ ஒரியண்டல் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியனான ஸூல்பிகரும் 8 போட்டிகளில் தோல்வியின்றி வெற்றியை பதிவு செய்துள்ளார். அதில் 24 சுற்றுகளும், 5 நாக் அவுட் வெற்றிகளும் அடங்கும்.


விருதுகள்

1. மதுரை பாஸ்போர்ட் அதிகாரிக்கு விருது
டில்லியில் நடந்த விழாவில் சிறந்த சேவையாற்றியதற்காக, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணிஸ்வர ராஜாவிற்கு பாஸ்போர்ட் சேவா புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.


முக்கிய நியமனங்கள்

1. பிசிசிஐ சிறப்புக் கமிட்டி: கங்குலி உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக நியமனம்.
பிசிசிஐ மறுசீரமைப்புக்காக லோதா குழு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்புக் குழுவில் இந்திய அணி முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிசிசிஐ மூத்த அதிகாரியான ராஜீவ் சுக்லா தலைமையிலான இந்தக் குழுவில், டி.சி.மேத்தியூ (கேரள கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர்), நாபா பட்டாசார்ஜி (மேகாலய கிரிக்கெட் சங்கச் செயலர்), ஜெய் ஷா (குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன்), பிசிசிஐ பொருளாளர் அனிருத் செளதரி, பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளதரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களில் பலர், கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்கெனவே பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். இதில் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார். பிசிசிஐ மூத்த அதிகாரியான ராஜீவ் சுக்லா ஐபிஎல் போட்டிக்கான தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. பக்கிங்ஹாம் அரண்மனை பாதுகாப்பு தலைவராக கனடா பெண் நியமனம்
பிரிட்டனின் பக்கிங்ஹாம் அரண்மனை பாதுகாப்பு படைக்கு, முதன்முறையாக, கனடாவைச் சேர்ந்த பெண், தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கனடா நாட்டு ராணுவ பெண் கேப்டனான, மெகன் கவுட்டோ, 24, தலைமையிலான, படைப் பிரிவு தற்காலிகமாக அமைக்கப்பட்டது.


பொருளாதாரம்

1. கூகுளுக்கு ரூ.17,000 கோடி அபராதம் விதித்தது ஐரோப்பிய யூனியன்!
அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் நம்பிக்கைக்கு எதிரான வகையில் செயல்பட்டதற்காக அந்நிறுவனத்துக்கு, ஐரோப்பிய யூனியன் 240 கோடி யூரோவை ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 கோடி) அபராதமாக விதித்துள்ளது.
கூகுள்தான் உலகின் மிக பிரபலமான தேடுபொறியாக உள்ளது. ஆனால், அதில் தனது சொந்த ஷாப்பிங் சேவைகளை முன்னிலைப்படுத்துவதற்கே கூகுள் நிறுவனம் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. கூகுளின் இந்த எதேச்சாதிகாரப் போக்கு, ஐரோப்பிய யூனியனின் ஏகபோகத் தடுப்பு விதிமுறைகளின் கீழ் சட்டவிரோதமான செயலாகும்.
கூகுள் நிறுவன தேடுபொறியில் அதன் சொந்த ஆன்லைன் சேவை, கூகுள் ஷாப்பிங் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டதால், டிரிப்அட்வைஸர், எக்ஸ்பீடியா போன்ற நிறுவனங்கள் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளன.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் நம்பிக்கைக்கு மாறான வகையில் செயல்பட்டதற்காக அந்த நிறுவனத்துக்கு 240 கோடி யூரோ அபராதமாக விதிக்கப்படுகிறது.
முன்னதாக, ஐரோப்பிய சந்தையில் ஏகபோக தனியுரிமையை நிலைநாட்டும் வகையில் செயல்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல் நிறுவனத்துக்கு 106 கோடி டாலர் (சுமார் ரூ.7,500 கோடி) அபராதம் விதிக்கப்பட்டதே அதிகபட்ச அளவாகக் கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த வரலாற்று சாதனையை கூகுள் நிறுவனம் முறியடித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் சந்தையில் நியாயமான போட்டியை முடக்கும் விதமாக செயல்பட்டதற்காக, அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள், அமேஸான், மெக்டனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் ஆகியவற்றின் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

உலக செய்திகள்: 30.06.17

உலக செய்திகள்:
சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நிகழ்ந்ததாக கூறப்படும் காட்சிகள் போலியானது எனவும் அமெரிக்கா அதன் பின்னணியில் உள்ளதாகவும் ரஷிய வெளியுறவு துறை குற்றம் சாட்டியுள்ளது.

இராணுவ கனரக போக்குவரத்துக்கு பயன்படும்  சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் அவியன் காய்ச்சல் பரவி வருகிறது. இது அங்குள்ள பறவைகளால் பரவி இருக்கலாம் என்று அந்நாட்டு வேளாண்மை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆமெரிக்க வாழ் இந்தியரான கிருஷ்ணா ஆர்.அர்ஷ என்பவர்; அமெரிக்காவின் வெளிநாட்டு சேவை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முந்தைய வரலாற்றில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று சீனா கூறியது.1962 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற போரில்  இந்தியா சீனாவிடம்  தோற்றது. இதனை நினைவுப்படுத்தும் விதமாகவே சீனா அவ்வாறு கூறியுள்ளது.

மின்னஞ்சல் மூலம் ஊடுருவி கணினிகளின் செயல்பாட்டை முடக்கும் “வான்னாகிரை” ரான்சம்வேர் என்ற இணைய வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் கணினிகளின் செயல்பாடு முடங்கும் என்று ஐரோப்பிய யூனியன் காவல் துறை (யூரோபோல்) அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தேசிய செய்திகள் :

சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 140 பேர் ஆந்திரா மீனவர்களால் சிறைப்பிடிப்பு.

சூரிய எரிசக்தி மற்றும் காற்று எரிசக்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் எரிசக்தியை அரசின் மின்தொகுப்பில் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை  முன்வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கினால் தான்    பொய்புகார்களும் அவதூறான கருத்துக்கள் பரவுவதை தடுக்க முடியும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டின் கணக்கின் படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் ரூ.4500 கோடியாகும். இதுவரை சுவிஸ் வங்கியில் இருந்த இந்தியர்களின் மொத்தப்பணத்தில் இது மிகவும் குறைவானது என சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஐரோப்பிய விண்வெளி தளத்திலிருந்து ஏரியான் ராக்கெட் சுமந்து சென்ற ஜிசாட்-17 செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம். இவை 3477 கிலோ எடைக்கொண்டதாகும்.

விளையாட்டு செய்திகள்:

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றதற்காக ஆந்திர அரசின் வருவாய் துறை  அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார் பிவி சிந்து.

2017 ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டிகள் ஜுலை 5 ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் நடைபெற உள்ளன.

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பிரிஸ்டனில் நேற்று ஆஸ்திரேலியாவும் இலங்கை அணியும் மோதி கொண்டனர். இலங்கை வீராங்கனை சமாரி யட்டப்பட்டு 178 ரன்கள் குவித்து சாதனைபடைத்துள்ளார்.

இந்திய ஏ அணியின் கேப்டன்களாக கருண்நாயர் மற்றும் மணீஷ்பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது ஆட்டத்தில் 2 வது  வெற்றி பெறுமா இந்தியா? இன்று மேற்கிந்தியத் தீவு அணியுடன் மோதுகிறது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7வது ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி.

வர்த்தக செய்திகள் :

நால்கோ (நேஷனல் அலுமினியம் கம்பெனி) நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்கு பிறகு பங்கு சந்தையில்  12 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

ஏர் இந்கியா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்து இண்டிகோ நிறுவனம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 23 புள்ளிகள் உயர்வு.
[01/07, 5:50 PM] T We Shine: ** Today Current Affairs **
** We Shine Daily Quiz - 01.07.17 **
More Info - www.weshineacademy.com
Any Queries - weshineacademy@gmail.com

உலக செய்திகள்:
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு சிறந்த குடியேற்றவாசி விருது வழங்கப்பட உள்ளது. அடோப் தலைவர் சாந்தனு நாராயண், அமெரிக்க சர்ஜன் ஜென்ரல் விவேக் மூர்த்தி ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4 அன்று இந்த விருது வழங்கப்பட உள்ளது.

தெற்கு பிரிட்டனின் ரீடிங் டௌன் நகரைச் சேர்ந்தவர் அர்னவ் சர்மா இவர் அறிவுக் கூர்மையைக் கண்டறிய ‘மென்ஸா’ தேர்வை எழுதினார். இத்தேர்வில் வெளிப்படும் நுண்ணறிவு எண் (ஐ.கியூ) மூலம் ஒருவரின் அறிவுத் திறனை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் அர்னவ் சர்மாவின் ஐ.கியூ -162 என கண்டறியப்பட்டது. மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பிரபல இயற்பியல் மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங் ஐ.கியூ -160 என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் சரீன் விஷ வாயுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது உண்;;;மை தான் என ரசாயன ஆயுதங்கள் தடை கண்காணிப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

தைவானுக்கு 1400 கோடி டாலர் மதிப்பிலான கப்பல் அழிப்பு ஏவுகணைகள், விமானக் கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்ட 7 வகை ராணுவ தளவாடங்கள் வழங்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கணினிகளின் செயல்பாட்டை முடக்கும் புதிய வகை ரான்சம்வேர் இணைய வைரஸ் உலகின் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகெங்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவதே புதிய ‘பெட்யா’ இணைய வைரஸைப் பரப்பியவர்களின் நோக்கம் என ஐரோப்பிய யூனியனின் இணைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலிய ராணுவத்தில் இணையதள பிரிவு ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். உள்ளிட்ட அன்னிய பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதே இதன் நோக்கமாகும்.

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் அங்கு ஆட்சியில் இருந்த அரசு கவிழ்ந்தது.

ஜெர்மனியில் அடுத்த வாரம் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை முதல் முறையாக சந்தித்துப் பேசவுள்ளார்.

தேசிய செய்திகள்:

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு –சேவை வரிவிதிப்பு நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்;;;;;த வரிவிதிப்பு கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வந்ததால் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். இவர் 15வது தலைமை வழக்கறிஞர் ஆவார். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்கும் படி, 3768 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பசி மற்றும் ஊட்டச்சத்து இன்மைக்கு எதிராகப் போராடி வரும் அங்கித் கவத்ரா (25) எனும் இந்திய இளைஞருக்கு இங்கிலாந்து ராணி இளம் தலைவர்கள் விருது வழங்கி கௌரவித்துள்ளார். இந்தியாவில் அங்கித் ‘ஃபீடிங் இந்தியா’ என்னும் அமைப்பைத் தொடங்கியுள்ளார். 2014ல் 5 பேரோடு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இன்று இந்தியா முழுக்க 43 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து ராணி இளம் தலைவர் விருதுக்காக உலகம் முழுவதுமுள்ள 60 தலைசிறந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களின் வயது 18 முதல் 29க்குள் இருக்க வேண்டும்.

மும்பையின் முக்கிய ரயில் நிலையமான சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தின் பெயர் ‘சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் முனையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரில் கடல்மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் 500க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

விளையாட்டுச் செய்திகள்:
மண்டல வாரியாக பயிற்சி அளிப்பதற்காக இந்திய பாட்மிண்டன் சங்கம் உருவாக்கியுள்ள பயிற்சியாளர்கள் குழுவில் முன்னாள் வீரர்களான அரவிந்த் பாட், ஜூவாலா கட்டா உள்ளிட்டோர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி கண்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய தடகள போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேஷ்வரில்  6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. இது 22வது ஆசிய தடகள போட்டி ஆகும். இந்த தொடரில் இந்தியா சார்பில் 95 பேர் அடங்கிய அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளரான அஸ்வின் ஒரு நாள் போட்டியில் விரைவாக 150 விக்கெட்டுகள் எடுத்த சுழல் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் 2வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய ‘ஏ’ மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிய உள்ள நிலையில் மேலும் 2 ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார் என இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகார பூர்வமாக அறிவித்தது. இவர் 2015ம் ஆண்டு முதல் இப்பதவியில் இருந்து வருகிறார்.

2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் பிவிசிந்து வெள்ளி பதக்கம் வென்றதற்காக பிவி சிந்து ஆந்திர அரசின் வருவாய் துறை அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார். சிந்துவை நேரடியாக நியமிப்பதற்கான அரசு ஆணை கடந்த மாதம் ஆந்திர சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வர்த்தக செய்திகள்:
நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள மின்சாரம், உருக்கு, சிமென்ட், உரம், சுத்திகரிப்பு பொருள்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி ஆகிய எட்டு துறைகளின் உற்பத்தி சென்ற மே மாதத்தில் 3.6சதவீதம் சரிந்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பஸ்லர் ‘என்எஸ்160’ என்ற புதிய மாடல் பைக்கை புது தில்லியில் அறிமுகப்படுத்தியது.

சரக்கு மற்றும் சேவை வரி இன்று முதல் அமலுக்கு வரவுள்ளதால் புதிய குடியிருப்புகளின் விலை உயரும் என கட்டுமான மேம்பாட்டாளர் அமைப்பான கிரெடாய் தெரிவித்துள்ளது.

எல் அண்டு டி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக எஸ்.என்.சுப்ரமணியன் இன்று பதவி ஏற்கிறார்.

பி.எம்.டபிள்யு (பவேரியன் மோட்டார் ஒர்க்ஸ்) கார்நிறுவனம் மும்பையில் நேற்று முன்தினம் புதிய 5 சீரிஸ் கார்களை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை 49.90 லட்சம் ரூபாய் ஆகும்.

மாருதி சுசுகி இந்தியா தனது கார் விலைகளை 3மூ வரை குறைத்து சரக்கு மற்றும் சேவை வரிதிட்டத்தின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.

உலக செய்திகள்:

உலக செய்திகள்:
ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் லண்டன், என்ஃபீடில் உள்ள பார்க்லேஸ் வங்கிக் கிளையில் நிறுவப்பட்டது. ஏடிஎம் இயந்திரம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெபர்ட் பரோனால் கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை முதல் முறையாக சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி டிரம்புக்கும் அவரது மனைவி மெலானியா டிரம்புக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் கைத்தறி சால்வை, ஹிமாசலப் பிரதேசத்தின் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருள்களை வழங்கினார்.

ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர் என ஆஸ்திரேலிய புள்ளிவிவரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டினரில் சுமார் 1.91 லட்சம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். சுமார் 1.63 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

உலகப் புகழ் பெற்ற ப்யூ ஆராய்ச்சி மையம் சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பாக இந்தியா உள்பட 37 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 37 நாடுகளில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் ரஷியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமே டிரம்ப் மீது நம்பிக்கை தெரிவித்தனர். மற்ற நாடுகளைச் சோந்த மக்களில் 75 சதவீதம் பேர் டிரம்பை அதிகம் கர்வம் கொண்டவராகவும் ஆபத்தானவராகவும் கருதுகிறார்கள். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் டிரம்ப் மீது நம்பிக்கை இல்லை என தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு சொந்தமான குரோண் எஸ்டேட்டுக்குரிய லாபம் 24 மில்லியன் பவுண்ட் அளவு (சுமார் ரூ.197 கோடி) அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ராணி இரண்டாம் எலிசபெத்தின் வருமானம் 8 சதவீத அளவுக்கு உயரும்.

தேடல் முடிவுகளுக்கு மேல், தனது சொந்த ஷாப்பிங் ஒப்பீட்டு சேவையை ஊக்குவிப்பதன் மூலம் கூகுள் நிறுவனம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு ஐரோப்பிய கமிஷன் 2.1 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ 17ஆயிரத்து 220 கோடி) அபராதம் விதித்துள்ளது. இத்தகைய செயல்களை 90 நாட்களுக்குள் அந்த நிறுவனம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஐரோப்பிய நாடான  நெதர்லாந்துக்கு சென்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டேயை ஆம்ஸ்டர்டாம் நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தேசிய செய்திகள்:

ஜுலை 1 முதல் பான் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.

3 நாள்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தில்லி திரும்பினார்.

தனிமாநிலமாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் மலைப் பகுதிக்கு காவல் துறை கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த ஹ_மாயுன் கபீர் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை சுமுகமாக அமல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜூன் 28 இன்று இரவு 10 மணியளவில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கப்படும்.

பொறியியல் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வiயில் அவர்களது திறனை மேம்படுத்திக் கொள்ள புதிய தொழில் பயிற்சித் திட்டம் ஒடிஸாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரில் அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நாளை தொடங்குகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஜூன் 30ம் தேதி நள்ளிரவு பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்து வைக்கிறார். அதில் துணை ஜனாதிபதி மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

உ.பி யில் அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படும் புந்தேல்கண்ட் பகுதியில் ‘நீர்த் தோழிகள்’ என்ற பெண்கள் அமைப்பு தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதி;ல் பெரும் சாதனை புரிந்து வருகிறது. குளம், கிணறுகளை தூர்வாருதல், கை பம்புகளை சரிசெய்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

விளையாட்டு செய்திகள்:
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்கள் பிரிவல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சீன தைபே கிராண்ட்ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரரும், நடப்புச் சாம்பியனுமான சௌரவ் வர்மா தனது முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்.

பிசிசிஐ மறுசீரமைப்புக்காக லோதா குழு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்புக் குழுவில் இந்திய அணி முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

2022 வரை ஐபிஎல் போட்டிகளுக்கான தலைமை ஸ்பான்சர்ஷிப்பை சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ தக்கவைத்துள்ளது. மொத்த ஒப்பந்தத் தொகை ரூ 2199 கோடி. முந்தைய ஒப்பந்தத்தை விட இது 554 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. விவோ முதன்முதலாக ஐபிஎல் தலைமை ஸ்பான்சர்ஷிப்பை 2015ம் ஆண்டு பெற்றது.

இலங்கை கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தை மீறியதாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாவுள்ளன.

ஐசிசி மகளிர் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து பாகிஸ்தானை வீழ்த்தியது.

வர்த்தக செய்திகள்:
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.25 ஆயிரம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.

முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனமான ரேமண்ட் ரூ.1400 கோடி முதலீடு செய்ய உள்ளது. மேலும் 300 புதிய விற்பனையகங்களை திறப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமராவதியில் புதிய ஆலையை திறப்பதற்காக இந்த முதலீட்டை மேற்கொள்கிறது.

பல்வேறுபட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிராமல் குழுமத்தின் பிராமல் எண்டர்பிரைசஸ் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடியை திரட்ட உள்ளது.

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் கோககோலா குளிர்பான நிறுவனம் 4000 விநியோகஸ்தர்களுக்கு ஜிஎஸ்டி தொடர்பான பயிற்சிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பயிற்சி அளிக்க கூகுள் இந்தியா நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ‘டிஜிட்டல் அன்லாக்டு’ என்கிற திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தாலேகான் ஆலையில் தயாரான பீட் ரக கார்களை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கி உள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ‘ஆர்கானிக்’ உணவுப் பொருட்களுக்கு வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து, மரபணு மாற்ற விதை உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல் இயற்கை உரம், விதைகள் மூலம் விளைவிக்கப்படுபவை ஆர்கானிக் உணவுப் பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.

தமிழ்நாடு

தமிழ்நாடு

1. நெய்வேலி புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி, நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள லிக்னைட் அரங்கில் (ஜூன் 30) தொடங்குகிறது. ஜூலை 9-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.

2. தென்னையிலிருந்து நீரா இறக்க உரிமம்: சட்ட மசோதா அறிமுகம்!
தென்னை மரங்களில் இருந்து நீரா அல்லது பதனியை இறக்குவதற்கு உரிமம் வழங்குவதற்கான சட்டத் திருத்த மசோதாவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பேரவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.
தென்னை மரங்களிலிருந்து நீராவை இறக்கி பக்குவப்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் நீராவைக் கொண்டு வெல்லம், தேன், பிஸ்கெட்டுகள், சர்க்கரை மற்றும் பிற பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் உரிமம் வழங்கப்பட உள்ளது. அதற்காக, 1937-ஆம் ஆண்டு மதுவிலக்குச் சட்டத்தைத் திருத்தம் செய்ய அரசு முடிவுசெய்துள்ளதாக மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

3. ரூ.2,350 கோடியில் சூரியசக்தி மின்னழுத்தப் பூங்கா!!!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் நரிப்பையூர் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களை உள்ளடக்கி 500 மெகாவாட் சூரியசக்தி மின்னழுத்தப் பூங்கா ரூ. 2,350 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் பொறியியல்-கொள்முதல்-கட்டுமானம் அடிப்படையில் அமைக்கப்பட்டு இயக்கப்படும்.


இந்தியா

1.  பணப்புழக்க தட்டுப்பாட்டை குறைக்கும் வகையிலும், சுலபமாக மாற்றும் வகையிலும், 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2. ரயில்களில் இயந்திரம் மூலம் உணவுப்பொருள் விநியோகம் முதல்கட்டமாக உதய் ரயிலில் அறிமுகமாகிறது.


உலகம்

1. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் ரூ.4,500 கோடியாக குறைந்தது 
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அங்கு இந்தியர்கள் போட்டு வைத்த பணம் கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில், இந்தியர்கள் பணம் ரூ.23 ஆயிரம் கோடி இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில், இந்தியர்கள் பணம் வெறும் ரூ.4 ஆயிரத்து 500 கோடியாக குறைந்துள்ளது. சுவிஸ் தேசிய வங்கி இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

2. நியூசிலாந்தின் கெர்மடேக் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

3. 1962 போரின் வரலாற்று படிப்பினைகளை இந்திய ராணுவ கற்க வேண்டும்: சீனா
எல்லைப் பகுதி ஊடுருவல் பிரச்சனை காரணமாக 1962-ம் ஆண்டு நடைபெற்ற போரின் வரலாற்று படிப்பினைகளை இந்திய ராணுவம் கற்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.


விளையாட்டு

1. இந்திய ஏ அணி கேப்டன்கள் கருண் நாயர், மணீஷ் பாண்டே
தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியின் கேப்டன்களாக கருண் நாயர், மணீஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களுக்கான அணியின் கேப்டனாக கருண் நாயரும், ஒருநாள் ஆட்டங்களுக்கான அணியின் கேப்டனாக மணீஷ் பாண்டேவும் பொறுப்பு வகிக்க உள்ளனர்.


விருதுகள்

1. அரசு பள்ளிக்கு நிலம் தானம் : டிரைவருக்கு விருது
அரசு பள்ளிக்கு, இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய, வாடகை வேன் டிரைவரை பாராட்டி, ராஜஸ்தான் மாநில அரசு விருது வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசால், கல்வி துறைக்கு சேவையாற்றுவோருக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும், பாமாஷா விருது, இந்த ஆண்டு மேஜர் அலிக்கு வழங்கப்பட்டது.


முக்கிய நியமனங்கள்

1. "பாய்" பயிற்சியாளர் குழு: அரவிந்த், ஜுவாலா கட்டா உள்ளிட்டோர் நியமனம்!
மண்டல வாரியாக பயிற்சி அளிப்பதற்காக இந்திய பாட்மிண்டன் சங்கம் (பாய்) உருவாக்கியுள்ள பயிற்சியாளர்கள் குழுவில் முன்னாள் வீரர்களான அரவிந்த் பாட், ஜுவாலா கட்டா உள்ளிட்டோர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய தலைமை பயிற்சியாளராக பி.கோபிசந்த் உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு மண்டலங்களில் உள்ள ஒற்றையர் பிரிவு வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் 19 பேர் கொண்ட பயிற்சியாளர் குழுவை பாய் நியமித்துள்ளது. இது தவிர, ஆடவர் இரட்டையர் வீரர்களுக்காக 12 பயிற்சியாளர்கள் குழுவும், மகளிர் இரட்டையர் வீராங்கனைகளுக்காக 4 பயிற்சியாளர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆடவர் ஒற்றையருக்கான பயிற்சியாளர் குழுவில், ஜெர்மன் ஓபன் முன்னாள் சாம்பியன் அரவிந்த் பாட், 2008-ஆம் ஆண்டு ஒலிம்பிக் வீரர் அனுப் ஸ்ரீதர், 2006-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற சேத்தன் ஆனந்த், பார்சிலோனா மற்றும் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தீபாங்கர் சாட்டர்ஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மகளிர் இரட்டையர் பயிற்சியாளர்கள் குழுவில், 2011-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற ஜுவாலா கட்டா, 8 முறை தேசிய சாம்பியன் மதுமிதா பிஸ்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே, ஆடவர் ஒற்றையர் ஜூனியர் வீரர்களுக்கு தேசிய பயிற்சியாளர் சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்ட 21 பயிற்சியாளர்கள் கொண்ட குழுவும், மகளிர் ஒற்றையர் ஜூனியர் வீராங்கனைகளுக்கு சீனியர் தேசிய சாம்பியனான சயாலி கோகலே உள்ளிட்ட 10 பயிற்சியாளர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.


அறிவியல் தொழில்நுட்பம்

1. செடி, கொடிகளில் கிடைக்கும் வாசனைத் திரவியங்கள் புற்றுநோயைத் தடுக்கும்: புதுவைப் பல்கலை. பேராசிரியர் கண்டுபிடிப்பு!
செடி, கொடிகளில் கிடைக்கும் வாசனைத் திரவியங்களுக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக புதுவைப் பல்கலை. பேராசிரியர் பாஸ்கரன் தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.


பொருளாதாரம்

1. செய்யது பீடி தயாரிப்பு குழுமம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்!
செய்யது பீடி குழும அலுவலகங்கள், உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் இரண்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில் செய்யது பீடி தயாரிப்பு குழுமம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா

இந்தியா

1. அலவன்ஸ் தொடர்பான 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அலவன்ஸ் தொடர்பான 7 ஆவது ஊதியக்குழுவின் 34 திருத்தங்கள் கொண்ட பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2. சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே 300 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்க திட்டம்
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரையிலான 450 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

3. ரேஷனில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலை உயர்வு இல்லை: மத்திய அரசு முடிவு
ரேஷனில் வழங்கப்படும் உணவு தானியங்களின் விலையை மேலும் ஓராண்டுக்கு உயர்த்துவது இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

4. இந்த பிரிவில் மட்டும் ரூ.1,470 கோடி வருமானம் ஈட்டிய இந்திய ரயில்வே
2016-2017 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ரயில்வே டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டதில் மட்டும் ரூ.1470 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 25.29 சதவிகிதம் அதிகம் ஆகும்.

5. தமிழில் ரெயில் டிக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை - பொங்கல் முதல் அமல்படுத்த திட்டம்
ரெயில் டிக்கெட்டுகள் தமிழில் வழங்கப்பட உள்ளதாகவும், வரும் பொங்கல் பண்டிகை முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.


உலகம்

1. அதிநவீன போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியது சீனக் கடற்படை!
சீனக் கடற்படை, 10 ஆயிரம் டன்கள் எடையைத் தாங்கும் வகையிலான அதிநவீன போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது. இந்தப் போர்க்கப்பல், இந்தியா மற்றும் அமெரிக்கக் கடற்படைக்கு கடும் சவாலாக விளங்கும் என்று கருதப்படுகிறது.
ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஜியாங்னன் கப்பல் கட்டுமானத் தளத்தில் 055 டிஸ்ட்ராயர் வகை போர்க்கப்பலை சீனக் கடற்படை அறிமுகப்படுத்தியது.
இந்தக் கப்பல் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். டிஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்களில் இது அடுத்த தலைமுறைக் கப்பலாகும். இந்தப் போர்க்கப்பலில் நவீன ரக ஏவுகணைகளும், எதிரிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் இருக்கும்.
மொத்தம் 10ஆயிரம் டன்கள் எடையைத் தாங்கும் வகையில் இந்தப் போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 போர் விமானங்களையும் இந்தக் கப்பலில் நிறுத்த முடியும்.

2. உலக புத்தகத் தலைநகர் ஷார்ஜா: யுனெஸ்கோ அறிவிப்பு!
2019-ஆம் ஆண்டுக்கான உலகப் புத்தகத் தலைநகராக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரை ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து "நீங்கள் இருப்பது ஷார்ஜா, எனவே படியுங்கள்" என்ற கோஷத்துடன், சிறப்பு பதிப்பக மண்டலங்களை உருவாக்குவது, பல்வேறு மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஆறு மாதங்களுக்கு நடத்தப்படும் என்று யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டில் உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினமான ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி இந்த நிகழ்ச்சிகள் தொடங்கும் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டின் உலக புத்தகத் தலைநகராக தில்லி தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1. விம்பிள்டன் டென்னிஸ் தரவரிசை: முதல் முறையாக முதலிடத்தில் முர்ரே!!!
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், பிரிட்டன் வீரரும், உலகின் முதல் நிலை வீரருமான ஆன்டி முர்ரே முதல் முறையாக போட்டித் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்தப் போட்டிக்கான தரவரிசை வெளியிடப்பட்டது.
இதன்படி, நடப்புச் சாம்பியனான ஆன்டி முர்ரே முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (2), ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் (3), ஸ்பெயினின் ரஃபேல் நடால் (4), ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா (5) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
இதனிடையே, மகளிர் பிரிவு தரவரிசையில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் முதலிடத்தில் உள்ளார். ருமேனியாவின் சைமோனா ஹேலப் 2-ஆவது இடத்திலும், செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா 3-ஆவது இடத்திலும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா (4), டென்மார்கின் கரோலின் வோஸ்னியாக்கி (5) இடத்திலும் உள்ளனர்.

2. ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: வரலாறு காணாத வகையில் அதிகரித்த பங்கேற்பாளர்கள்!
22-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் வரும் ஜூலை 6 முதல் 9-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் அதிகமான வீரர்/வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2015-ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் நடைபெற்ற கடந்த சீசனில் 40 நாடுகளைச் சேர்ந்த 497 வீரர்/வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், இந்த சீசனில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் இரட்டிப்பாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போட்டிக்காக கலிங்கா விளையாட்டு அரங்கத்தில், தடகள சம்மேளனங்களுக்கான சர்வதேச சங்கத்தின் (ஐஏஏஎஃப்) தர மதிப்பீடுகளை பூர்த்தி செய்யும் வகையில் சர்வதேச தரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

3. டாப் 10 வீரரை வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்திய தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன்!
துருக்கியில் நடைபெற்று வரும் அண்டல்யா ஓபன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 222-ம் இடத்தில் உள்ள ராம்குமார் ராமநாதன், உலக அளவில் எட்டாம் நிலையில் உள்ள டொமினிக் தீமைத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். ராம்குமார் 6-3, 6-2 என்கிற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


விருதுகள்

1. அமெரிக்காவில் இந்தியக் காவல் துறை அதிகாரிக்கு விருது!
ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக அமெரிக்க அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதுக்கு இந்த ஆண்டில் தெலங்கானா மாநிலம், ரச்சகொண்டா நகர காவல் துறை ஆணையர் மகேஷ் முரளிதர் பகவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


முக்கிய நியமனங்கள்

1. கேரள டிஜிபியாக லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம்
கேரள காவல்துறை டிஜிபியாக லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2. ஏஐசிஎஃப் தலைவராக வெங்கட்ராம ராஜா தேர்வு!
அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் (ஏஐசிஎஃப்) தலைவராக பி.ஆர்.வெங்கட்ராம ராஜா ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏஐசிஎஃப் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கட்ராம ராஜா, 2017-2020 வரையிலான காலகட்டத்தில் தலைவர் பொறுப்பில் இருப்பார்.
அதேபோல் தில்லியைச் சேர்ந்த பரத் சிங் செளஹான், கெளரவ செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில் வி.ஹரிஹரன் இருந்தது குறிப்பிடத்தக்கது.


அறிவியல் தொழில்நுட்பம்

1. காயானாவில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள் - வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
தொலைத்தொடர்பு, டிடிஹெச் (DTH) சேவை மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை லத்தீன் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது.
அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்பட்டது.
ஜிசாட்-17 செயற்கைகோள் 3,477 கிலோ எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இது இந்தியாவின் 18வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருளாதாரம்

1. ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு அனுமதி: அருண் ஜேட்லி!
ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க கொள்கை ரீதியில் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம் 140 விமானங்களைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 41 சர்வதேச மற்றும் 72 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமானங்கள் தவிர, மும்பையில் 32 ஏக்கர் நிலப்பரப்பில், ஏராளமான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
புது தில்லி, லண்டன், ஹாங்காங், நைரோபி, ஜப்பான் மற்றும் மொரிஷியஸ் ஆகியவற்றிலும் ஏர் இந்தியாவின் சொத்துக்கள் உள்ளது. 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிதி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கப்படுவதாக இருந்த 30,231 கோடி ரூபாயில் 23,993 கோடி ரூபாய்களை மட்டுமே வழங்கியுள்ளது.
அதேசமயத்தில் 2015-16 நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 3,587 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக செய்திகள்:

உலக செய்திகள்:
• அதிநவீன வசதிகளை கொண்ட புதிய தலைமுறை நாசகார கப்பல் ஒன்றை கண்டுபிடித்து தன் நாட்டுக்கு அர்ப்பணம் செய்தது சீனா. கடற்படை ஆயுத அமைப்பை மேம்படுத்துவதில்  இக்கப்பல் சிறந்ததாக  விளங்கும் என எதிர்பாhக்கப்படுகிறது.இதற்கான நிகழ்ச்சி ஷாங்காயில் நடந்தது.

• வருங்கால  மனித உணவு தேவையைக் குறித்து கணக்கிட்டால் 2050 ஆம் ஆண்டுக்குள்   உணவு உற்பத்தி 70 சதவீதம் உயர வேண்டும். ஆனால் விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது இச்சூழல் இப்படியே நீடித்தால் வருங்காலத்தில் பூச்சிகளை உண்ணக்கூடிய நிலை ஏற்படும் என அறிவியல்  ஆராய்ச்சியாளர்கள் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவிக்கின்றனர்

• மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நகரை தேர்ந்தெடுத்து அந்நகருக்கு ‘புத்தகத் தலைநகர்’ என்ற அந்தஸ்தை கொடுக்கும் திட்டத்தை ஐ.நா வின் யுனெஸ்கோ அமைப்பு அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் வரும் 2019-ஆம் ஆண்டுக்கான உலக புத்தகத் தலைநகராக ‘ஷார்ஜா’ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

• ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்கான விருது அமெரிக்க அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இவ்விருதிற்காக இந்தியக் காவல் துறை அதிகாரியான தெலுங்கானா மாநிலம் ரச்சகொண்டா நகர காவல் துறை ஆணையர் மகேஷ் முரளிதர் பகவத் தேர்வுசெய்யப்பட்டார். ஆமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி இவ்விருதை வழங்கினார்.

• ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியிலன் 9-வது பதிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் புதியதாக 900 ஆங்கில வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றில் இந்தியஆங்கிலத்தில் இருந்து 240 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும். இந்திய உணவுப்பொருளாகும். கறி லீப் (கறிவேப்பிலை) கென்னா தால் (சுண்டல்) கீமா (வெட்டப்பட்ட இறைச்சி துண்டுகள்) பப்பட் (அப்பளம்) போன்றவையாகும்.

• 6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்  அமெரிக்காவில் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவில் தளர்வு ஏற்ப்பட்டுள்ளது. தங்கள் நெருங்கிய உறவினரை பார்க்க மற்றும் தொழில் ரீதியாக ( சீரியா சூடான் ஈரான் லிபியா சோமாலியா ஏமன்) போன்ற 6 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.

• தென் கொரியா முன்னாள் அதிபர் கியூன்ஹை வடகொரியா கிம் ஜாங்யை விமானத்தில் குண்டு வைத்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த விவகாரத்தில் கியுன்ஹைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வட கொரியா  பத்திரிக்கையான கேசின்ஏ தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த அறிவிப்புக்கு ஜப்பான் கடூம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

• சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க வான்வழி தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 42 பொதுமக்களும் 15 ஐ.எஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

• உலகிலேயே மதம் தொடர்புடைய முதல் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பேனோஸ் ஐரீஸின் மையத்தில் “டியர்ரா சான்டா” என்ற பெயரில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த  ஜெருசலேமின் தெருக்களை அப்படியே பிரதிபலித்து காட்டுவதற்காக டியர்ரா சான்டா என்ற அமைப்பு இப்பூங்காவை உருவாக்கியுள்ளது.  

தேசிய செய்திகள் :

• புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறையால் வழங்கப்படும்  ரெயில் டிக்கெட்டுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலே உள்ளன. இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் வசதி குறைவாக உள்ளது.எனவே டிக்கெட்டுகளை அந்தந்த மாநில மொழிகளில் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று பயணிகளும் பல்லேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிணங்க  ரெயில் டிக்கெட்டுகள் தமிழில் வழங்கபட உள்ளாதாகவும் வரும் பொங்கல் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

• வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதால் ஆண்டுதோறும்  71 சதவீதம்   பயிர்கள் சேதம் அடைவதாகவும்  17 சதவீதம் மதிப்புள்ள கால்நடைகள்  உயிர் இழப்பதாகவும்  3 சதவீதம் மனித உயிர் பறிபோவதும் தெரிய வருகிறது. எனவே உயிர் மற்றும் பொருட்சேதத்தை தவிர்க்க வன விலங்கு எதிர் கொள்ளல் மேலாண்மையை இந்திய அரசு வலுப்படுத்துவது அவசியம் என சர்வதேச விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றன.

• நாட்டில் முதல் முறையாக ஒடிசா தலைநகர் புவனேஸ் வரத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.3.35 கோடியில் கால்நடைகளுக்கான இரத்த வங்கி தொடங்கப்பட உள்ளது. இதற்கு தேசிய வேளாண் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். மத்திய அரசு 60 சதவீதம் மாநில அரசு 40 சதவீத பங்களிப்புடன்  இந்த இரத்த வங்கி தொடங்கப்படும்.

• புதுடெல்லியில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கிலோவிற்கு ரூ.3 கோதுமை ரூ.2 பிற தானியங்கள் ரூ.1 என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றன. உணவு தானியங்களின் விலையை மேலும் ஓராண்டு உயர்த்துவதில்லை என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்  கூறியுள்ளார்.

• தோலைத்தொடர்பு டிடிஹெச் (னுவுர்) சேவை மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது. இன்று அதிகாலை 2.29 மணிக்கு இந்த செயற்கை கோள விண்ணில் பாய்ந்தது. புpன்னர் ஜிசாட்-17 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.இதன் எடை 3.477 கிலோவாகும் . இதன் ஆயுட்காலம் 15 அண்டுகள் ஆகும்.

• 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து புதிதாக 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது புதுடெல்லியில் ஆர்பிஐ அச்சகங்களில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும்  இப்பணியை இரண்டு வாரங்களுக்கு முன்பே துவங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

• குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறும். வேட்பு மனு தாக்கல் ஜுலை 4 ம் தேதி  தொடங்குகிறது.18 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் 790 பேர்  வாக்களித்து குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள்.

விளையாட்டு செய்திகள்:

• இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஏகான் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

• 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் ஜூலை 6 -9 வரை நடைபெறவுள்ளது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 1000க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

• சீன தைபே கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியர்களான சிரில் வர்மா, ஸ்ரீ கிருஷ்ண பிரியா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

• அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் தலைவராக பி.ஆர்.வெங்கட்ராம் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2017 – 2020 வரை தலைவராக இருப்பார். தில்லியைச் சேர்ந்த பரத்சிங் சௌஹான் கௌரவ செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

• புரோ கபடி லீக் போட்டியின் 5வது சீசன் ஜூலை 28ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இப்போட்டியின் இறுதிச்சுற்று சென்னையில் அக்டோபர் 28ம் தேதி நடைபெறவுள்ளது.

• விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3 முதல் 16 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே முதலிடம் பிடித்துள்ளார்.

• மகளிர் உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஜூன் 27 அன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது.

     வர்த்தக செய்திகள்:

• ஏர்இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க இண்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

• புp.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிக்சர் அல்லது 666 என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2ஜிபி டேட்டா பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

• நடப்பு நிதியாண்டில் ஆடை ஏற்றுமதி 2000 கோடி டாலரை எட்டும் என இந்திய ஆடை தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராகுல் மேக்தா தெரிவித்துள்ளார்.

• சீனாவைச் சேர்ந்த எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

• கோக கோலா நிறுவனம் விலை உயர உள்ளது. ‘கின்லே’ பிராண்டு தண்ணீர் விலை குறைக்கப்பட உள்ளது. ‘வேல்யு வாட்டர்ஷ என்ற பிரிவில் தண்ணீர் இதை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உ;ள்ளது.

• ரஷ்யா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ‘யெட்ரா வைரஸ்’ என்ற கணிகி நாசகர செயலியால் பாதிக்கப்பட்டன.

நடப்பு நிகழ்வுகள் – 27 ஜூன் 2017

நடப்பு நிகழ்வுகள் – 27 ஜூன் 2017

இந்தியா

1.சிக்கிம், இமாச்சல், கேரளாவை தொடர்ந்து ஸ்வச் பாரத் மிஷன் கிராமின் திட்டத்தின் படி, உத்ரகாண்ட் மற்றும் ஹரியானா மாநிலங்களின் ஊரக பகுதிகள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லா மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2.Power For All திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என உத்திரபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.

உலகம்

1.கனடாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக , முதன்முறையாக டர்பன் அணிந்த சீக்கிய பெண்மணி பல்பிந்தர் கவுர் ஷெர்கில் (Palbinder Kaur Shergill) நியமிக்கப்பட்டுள்ளார்.

2.ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் முதல் தலைவராக , ரஷ்யாவின் விளாடிமிர் வோரன்கவ் (Vladimir Voronkov) நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு

1.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணைத்தலைவராக சிங்கப்பூரைச் சேர்ந்த இம்ரான் கவாஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம்

1.1954 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினினிஸ்க் நகரில் திறக்கப்பட்டது.

2.1954 – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

3.1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

GST Fully Updates in தமிழ்

GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு  வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.

1. Second sales  என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.

2. Online    மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

3.  உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10,15,20 ஆகிய தேதிகளில் மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.

4. Aggregated turnover  என்பது taxable goods +exempted good +Zero rated goods+Export goods ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.மேலும் ஒரே PAN number ல் இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூ ட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

5. Tin number பெற்றவர்கள் VAT department கொடுக்கும் temporary id &password மூலம் GST portal ல் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். 10 ந்தேதிக்குள் பதிவு செய்து கொண்டால் அந்த மாதத்திற்குண்டா ITC claim  செய்ய முடியும்.

6. வரி விகிதங்கள் 3 தலைப்புகளாக பிரிக்கப்பட்டு ள்ளது. 
 - 1)CGST -  Central goods and service tax.
 - 2)SGST -State goods and service tax. 
 - 3)IGST - Integrated goods  and service tax. 
இதில் IGST என்பது வேறு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது Invoice ல் குறிப்பிடவேண்டும்.  IGST தலைப்பில் வரி செலுத்த வேண்டும்.   IGST =CGST +SGST. 

 IGST  என்பது IT based centrally managed automated mechanism to monitor the "Inter state sales and supply of goods and services.

7.  வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர். Input tax credit எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.

8. Invoice ல்  விலை குறிப்பிடும் போது வரி உள்ளடக்கியது என குறிப்பிடமுடியாது. வரி தணியே காண்பிக்க வேண்டும்.அப்போதுதான் அவரிடம் வாங்குபவர் ITC தன்னுடைய ரிட்டர்ன் ல்  காண்பிக்க முடியும்.   Packing charges, freight ஆகியவற்றை வரி கணக்கிடும்போது  சேர்க்க  தேவையில்லை. விற்பனை தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.

9.Invoiceகள் 3   copy இருக்க வேண்டும். நிதி ஆண்டின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தொடர் எண்கள் இருக்கவேண்டும். முறையே buyer, transporter, seller ஆகியோருக்கு 3 காப்பிகள்.உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று reference number வாங்கி supplementary invoice  போட்டு transport மூலம் சரக்குகள் அனுப்பலாம்.  Supplementary invoice ல் orginal invoice number குறிப்பிடவேண்டும்.  Original invoice ல் reference number குறிப்பிடவேண்டும்.

10. Capital goods க்கும் ITC எடுக்கலாம். ஆனால்அவை Income tax return ல் depreciation claim செய்யாமல் இருக்க வேண்டும். இது குறித்து ஆடிட்டரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.

11. வணிகர்கள் composite scheme மூலம் குறைந்த அளவு வரி செலுத்த முடியும். 50 லட்சம் ரூபாய் வரை "aggregated turnover" உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்பவர்கள் தகுதியானவர்கள்.  ஆனால் ITC எடுக்க முடியாது. சட்டம் அமலுக்கு வந்த30 நாட்களுக்கு உள்ளாக உரிய அனுமதி பெற்று செய்யலாம்.  வாங்கி விற்பவர்கள் மட்டும் தகுதியானவர்கள். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால் composite scheme மூலம் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் இருந்து வாங்கி வியாபாரம் செய்யும் அடுத்த வணிகர் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். முடிந்தவரை composite வணிகர்களிடம் consumer-ஐ தவிர மற்றவர்கள் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.

12. Casual trader என்பவர் ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர் ஆகும். உதாரணமாக பண்டிகை காலங்களில் மட்டுமே கல்யாண மண்டபம் மற்றும் வேறு இடங்களில் வியாபாரம் செய்பவர் ஆகும். அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால்    turnover limit ஏதுமின்றி எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடையாது.
13. Gst சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நமக்கு மூலப் பொருட்கள் வழங்கும் வியாபாரிகள்  composition  scheme மூலம் வியாபாரம் செய்கிறாரா அல்லது ITC  எடுத்து வியாபாரம் செய்கிறார்களா என 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளவேண்டும் Consumer- ஐ தவிர மற்றவர்கள் composition scheme மூலம் செய்யும் வியாபாரிகளை தவிர்ப்பது நல்லது. நாம் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். நமது வியாபாரம் மற்றவர்களைவிட குறைவாகவே நடக்கும்.

14. வரி விதித்துள்ள பொருட்களை ஒரு வியாபாரி தனது பில்லில் வரி குறிப்பிடாமல் கொடுத்தால் அவர் Composition scheme மூலம் வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
 அல்லது 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

15. GST ரிஜிஸ்டர் செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. 20 லட்சம் ரூபாய் வரை  job work செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள தேவை இல்லை.

16. Job work  கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில் கொடுக்கவேண்டும்.180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி அபராதம் விதிக்கப்படும்.

17. Inter state self supplies such as stock transfer will be taxable as a taxable person has to take state wise registeration.
 B2C means supplies to unregistered person. (i. e.)business to consumers.
 B2B means supplies to registered person. (i. e.)business to business men.

18. அரசுஅறிவிக்கும் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள தவறியவர்கள் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தங்களது  stock பொருட்களுக்கு Input credit கோர முடியாது. ஒரு வணிகர் ஒரு பில்லில் உள்ள ITC  யை பில் தேதிகளில் இருந்து ஒரு வருடத்திற்குள் உபயோகித்து கொள்ள வேண்டும். ஒரு   Invoice ல் bill amount ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 1%TDS  பிடித்து அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

19. வரி செலுத்தும் போது  கீழ்   கண்ட GST account code எழுத வேண்டும். 
CGST -Tax 00010001,            
IGST   -Tax-0002 0001
SGST  -Tax00030001
Interest, fees, penalty, additional tax ஆகியவற்றிற்கு தனி தனி account codeகள்உள்ளன.

20. வரியுள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் உள் மாநிலத்தில் அதற்கு வரி செலுத்த வேண்டும் அன்றிலிருந்து மாதாமாதம்  படிவம் தாக்கல் செய்ய வேண்டும் வெளி மாநில வியாபாரங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு என்பது கிடையாது.

21.Every registered taxable person whose aggregated turnover during a financial year exceeds one crore rupees shall get his account audited and he shall furnish a copy of audited annual accounts and a reconciliation statement duly certified in  FORM GSTR-9B,electronically through a common portal.

22. ஒரு பில்லில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் வரியுள்ள பொருட்களை
unregistered person க்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் டெலிவரி செய்யும் இடம், மாநிலம், மாநில எண்  ஆகியவற்றை பில்லில் குறிப்பிட வேண்டும்.

23. வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST   என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.உள்மாநில விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST    என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.

24.GST வரி செலுத்துபவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு transport வாடகை கொடுக்கும் போது transporter  கொடுக்கும் invoice  ல் உள்ள tax யை  ITC-யாக எடுத்துக்கொள்ளலாம்.

 25. வருடாந்திர ரிட்டர்ன் அடுத்து நிதியாண்டு 31 டிசம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும். Compsition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Form GSTR-4,GSTR -4  A  ஆகிய 2 படிவங்களும் GSTR-9A என ஒரு வருடாந்திர படிவமும்
 தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். வெளி மாநில purchase &sales செய்யக்கூடாது.

26. ஒரு வியாபாரி வேறு மாநில    Consumer அல்லது unregistered person க்கு விற்றால்,    அதன் மதிப்பு ரூ 2,50,000 க்கு மேல் இருந்தால்அந்த invoice details GSTR-1 ரிட்டர்னுடன் upload செய்ய வேண்டும். ரூ 2,50,000  க்கு குறைவாக  இருந்தால் மாநில வாரியாக மொத்த விற்பனை மதிப்பு மட்டும் தெரிவித்தால் போதுமானது.

27. ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ. 10,000 வரையே cash,cheque, அல்லது DD மூலம் வரி செலுத்த முடியும்.  அதற்கு மேல் எதுவும் செலுத்த வேண்டி இருந்ததால் Internet banking, credit card, debit card, RTGS  மற்றும் NEFT மூலம் செலுத்த வேண்டும். NEFT  அல்லது RTGS மூலம் செலுத்துவதாக இருந்தால் சலானுடன் இணைந்து வரும்  form உடன்  பேங்கி ல் கொடுக்க வேண்டும்.
 விற்பனையை அதிகரிக்க கொடுக்கும் இலவச பொருட்களுக்கு ம் வரி செலுத்த வேண்டும்.
28. GST slab rates are 5%,12%,18%,28%.

29. Job work  "service " என்ற தலைப்பில் வரும். Job work செய்த இடத்தில் இருந்து நம் பார்ட்டிகளுக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் அவர் Unregistered job worker ஆக  இருந்தால் அவருடைய முழு முகவரிநம் ரிஜிஸ்டரேசன் சர்டிபிகேட்டில் இடம் பெற வேண்டும்.

30. ஒரு unregistered jobworker - யிடம் jobwork கொடுக்கும் போது ஏற்படும் வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.

31. நாம்  அனுப்பிய சரக்குகளை ஏதாவது ஒரு காரணத்துக்காக நம் பார்ட்டி திருப்பி அனுப்பினோலோ அல்லது விலை வித்தியாசம் கேட்டாலோ அல்லது  அவராகவே குறிப்பிட்ட தொகையை ஒரு பில்லில் பிடித்துக்கொன்டு மீதி அனுப்பினாலோ நாம் அவருக்கு GST  சட்டத்தின்படி credit note அனுப்ப வேண்டும். அதை அந்த மாத ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.  நம் பார்ட்டியும்  அவருடைய ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.

32.Registered taxable person அட்வான்ஸ் வாங்கினால் அதை பற்றிய தகவல்களுடன் receipt voucher கொடுக்க வேண்டும்.

33. வரியானது பைசா கணக்கில் வந்தால் nearest rupee கணக்குப்படி round off செய்து கொள்ளலாம்.

34. நாம் வாங்கிய  Raw Material  (taxable goods )நமக்கு வேண்டாம் என்று வாங்கியவர்களிடம் திருப்பி கொடுப்பதாக இருந்தால் 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விட வேண்டும். ITC reverse செய்ய வேண்டும்.

35. PAN number இல்லாமல் ஒரு வியாபாரி வேறு மாநில வியாபாரிக்கு பொருட்கள் அனுப்ப முடியாது

36. ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை  turnover செய்பவர்கள் Invoice ல்  HSN code   குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து கோடி வரை  turnover  செய்பவர்கள் முதல் 2 degit  HSN code குறிப்பிட வேண்டும்.

37. வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, வண்டியில்  உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ ஐம்பதாயிரத்தை தாண்டினால் வண்டியில்  உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க  அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.

38. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரியுள்ள பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வரியற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது.

39. 50 லட்சம் ரூபாய் வரை turnover உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்யும்  உற்பத்தியாளர்கள் Composition scheme மூலம் வியாபாரம் செய்ய தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

40.GST கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருட்களை தயார் செய்யும் manufacturer மட்டுமே Composition scheme மூலம் வியாபாரம் செய்ய முடியும்.

41. அரசு சில சமயம் சில பொருட்களுக்கு "reverse charge "முறையில் வரி விதிக்கும். அப்போது வாங்குபவர்கள் தான் வரி செலுத்த வேண்டும்.

42. Aggregated turnover கணக்கிடும்போது value of supply கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  அதாவது ஒரு பில்லில் உள்ள மொத்த மதிப்பு  ஆகு‌ம். Commission,freight, packing  charges  சேர்த்து கணக்கிடபடும்.discount சேராது.

43. GST நம்பர் எடுத்திருந்தால், வரி விலக்கு பொருட்களை விற்பனை செய்தாலும் கண்டிப்பாக  nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

44. GST நம்பர்  எடுத்திருந்தாலே ஒவ்வொரு மாதமும் 3 முறை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். வியாபாரம்  இல்லை என்றாலும் nil  ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

45. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால், பொருளின் மதிப்பு ரூ 100 க்கு மேல் இருந்தால் அவர் Tax invoice க்கு  பதிலாக வேறு பில் கொடுக்கலாம்.Section 28 .3 (b).

46. பில்லில் வரியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டால் அதை சரி செய்ய Credit note /debit note கொடுத்து சரி செய்ய வேண்டும்.

47. GST நம்பர் எடுத்தவர்கள் தான் விற்கும் பொருட்களுக்கு முன்பணம் வாங்கியிருந்தால் receipt voucher கொடுக்க வேண்டும்.  அதை ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். Section 33.

48. நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில்  ஏதாவது தவறு  அல்லது  விடுபட்டிருந்தாலோ, அதை சரி செய்யும் நாள் வரை  உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

49. முதன் முதலாக நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் உள்ள input credit amount  (நம்மிடம் உள்ள stock பொருட்களுக்கு )provisional ஆக  எடுத்துச் கொள்ளப்படும்.  வித்தியாசம் இருந்தால் உரிய நடைமுறை பின்பற்றப்படும். Section 36

50. GST சட்டத்தின்படி கணக்கு புத்தகங்களை, மற்ற  ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வரும் 60  மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

51. ரூபாய் ஒன்றறை கோடி வரை  டர்ன்ஓவர் செய்யும் வியாபாரிகளில் 90 சதவீதம் மாநில அரசும் மீதி 10 சதவீதத்தை மத்திய அரசும் கண்காணிக்கும். 
52. 15 நாள் நோட்டிஸ் கொடுத்து நமது இடத்தில்  ஆவணங்களை, பொருட்களை பார்த்து ஆடிட் செய்ய  அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Section 63

53 GST வரி வசூலித்த பிறகு, அந்த வரியை  அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க  அரசுக்கு  அதிகாரம் உள்ளது.

54. ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய  அதிகாரிகளுக்கு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

55. GST சட்டத்தின்படி மற்ற  அரசு  அதிகாரிகளும் GST  அதிகாரிகளுக்கு உதவ  அதிகாரம்  அளிக்கப்பட்டுள்ளது.

56. GST சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிக பட்சம் 25000 ரூபாய் வரை  அபராதம் விதிக்கப்படும்.  Section 85

57. சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக  என்ட்ரி செய்திருந்தாலும் அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு  இருந்தால் திருத்திக்கொள்ள  அபராதம்  இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது.  Section 86

58. GST சட்டத்தின்படி முறையான  ஆவணங்கள்  இல்லாமல் பொருட்களை  கொண்டு  செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து வரி மற்றும் 100 சதவீதம்  அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் செலுத்திய பிறகு  வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். Section 89

59. Parnership வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒரு பார்ட்னர் விலகுவதாக  இருந்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

60. Cenvat படி itc எடுக்க விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 90  நாட்களுக்கு முன்பு இருந்த பில்லில் உள்ள ITC யை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்  .Section 167.

61. ஆர்டர், சம்மன் போன்றவற்றை வியாபாரியின்e-mail முகவரிக்கு அனுப்பினாலே  அது பதிவு தபாலில் அனுப்பியதற்கு சமம் என்று Section 159 ல் கூறப்பட்டுள்ளது.

62. புட்டா கட்டிங் செய்வது, துணிகளுக்கு பிராசசிங் ,கேலண்டரிங்,பிரிண்டிங் செய்வது service என்ற தலைப்பில் வரும். Schudule-2

63. "Mutatis mutandis" means "the necessary changes having been made ".
 Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில purchase செய்யலாம், வெளி மாநில sales செய்யக்கூடாது.

64. நாம் 30 ம் தேதி பொருட்களை அனுப்பி அது  அடுத்த மாதம் 16ம் தேதி நமது பார்ட்டிக்கு  கிடைத்தால் GST  சட்டத்தின்படி 30ம்தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  அடுத்த மாதம் நாம் அதற்கு வரி செலுத்த வேண்டும்.  ஆனால் 10 ம் தேதிக்குள் நமது பில்  பார்ட்டிக்கு கிடைத்தால் மட்டுமே அவர் ITC எடுக்க முடியும். நமது பில்லும் ஏற்றுக் கொள்ளப்படும்.  இல்லாவிட்டால் mismatch என  இருவருக்கும் notice வரும்.

65. வரி விகிதத்தில் மாற்றம்  ஏற்படும் போது  "time of supply "என்பது invoice தேதி அல்லது பணம் வந்த தேதி இதில் எந்த செயல்  முதலில் நடந்ததோ அது ஏற்றுக் கொள்ளப்படும்.

66. நாம் நமது பார்ட்டிகளுக்கு தாமதமாக payment செய்து அதற்கு வட்டி, அபராதம் போன்றவற்றை செலுத்தி இருந்தால் அவையும் "Aggregated turnover "கணக்கிடும்போது சேர்த்துக் கொள்வர்.

67.Partnership firm ல் partner change நடந்தால் அதை தெரியப்படுத்தி புதிய registration செய்து கொள்ள வேண்டும்.

68.Original registration certificate கிடைத்த பிறகு, அந்த நாள் வரை  ஏற்கனவே கொடுத்த  invoiceகளுக்கு பதிலாக வேறு revised invoice பார்டிகளுக்கு கொடுக்கவேண்டும். Section 28

69. நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக கமிஷனர் கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கொடுத்து தணிக்கை செய்ய கமிஷனருக்கு  அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டும்.  Section 68

70. Rawmaterial suppliers, manufacturers,(நாம் ),buyers ஆகிய மூவரும் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான படிவங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒவ்வொரு வரும் ITC CLAIM செய்ய முடியும். Section 64.

அனைவருக்கும் பகிர்வது அவசியம்.