Friday, August 11, 2017

பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு

பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு


புரட்சிக் கவிஞர், பாவேந்தர், தமிழ்நாட்டின் இரசு+ல் கம்சதேவ் என்று சிறப்பு பெயர் கொண்ட பாரதிதாசன் புதுவையில் கனகசபை - இலக்குமியம்மாள் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.

நு}ல்கள்:

📖 குடும்ப விளக்கு - மணிமேகலை வெண்பா

📖 பாண்டியன் பரிசு - காதல் நினைவுகள்

📖 சேரதாண்டவம் - கழைக்கூத்தின் காதல்

📖 இருண்ட வீடு - அமைதி

📖 தமிழச்சின் கத்தி - சௌமியன்

📖 பிசிராந்தையார் - நல்ல தீர்ப்பு

📖 குறிஞ்சித்திட்டு - தமிழ் இயக்கம்

📖 அழகின் சிரிப்பு - காதலா? கடமையா?

📖 தமிழியக்கம் - சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

📖 இசையமுது - இரண்யன் அல்லது இணையற்ற வீரன்

📖 இளைஞர் இலக்கியம் - எதிர்பாராத முத்தம்

📖 திருக்குறள் உரை - கண்ணகி புரட்சிக் காவியம்

🌷 பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் எனப்பெயர் மாற்றிக் கொண்டார்.

🌷 இவர் வாழ்ந்த காலம் - 29.04.1891 முதல் 21.04.1964 வரை

🌷 தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.

🌷 இவர் குயில் என்னும் இதழை நடத்தினார்.

🌷 தமிழ்நாட்டின் இரசு+ல் கம்சதேவ் என்று அழைக்கப்படுகிறார்.

🌷 (இரசு+ல் கம்சதேவ் உருசிய நாட்டின் மாக்கவிஞர்)

🌷 தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்.

🌷 பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே இவர்காலத்தில் உருவானது.

🌷 16 வயதில் இவர் புதுவை அரசின் கல்லு}ரியில் பேராசிரியராக பணியாற்றினார்.

🌷 18 வயதில் அரசு இவருக்கு அரசுக் கல்லு}ரியில் தமிழாசிரியார் பொறுப்பை வழங்கியது.

எ.கா: வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தினம்(சுரதா) என்று தம்மை அழைத்துக் கொண்டனர்.

➢ பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு இவரே முதலெழுத்தும் தலையெழுத்தும் ஆவார்.

➢ 1920 ஆம் ஆண்டு பழநியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

➢ தமிழக அரசினால் ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது.

➢ திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

➢ சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - பொதுவுடைமை பற்றியது

➢ அழகின் சிரிப்பு - இயற்கையை வர்ணிப்பது

➢ குடும்பவிளக்கு - கற்ற பெண்களின் சிறப்பு பற்றியது

➢ இருண்ட வீடு - கல்லாத பெண்களைப் பற்றியது

** TNPSC Current Affairs **(((*10.08.17*)))

** TNPSC Current Affairs **(((*10.08.17*)))
உலக செய்திகள் :
இந்தியா உள்பட 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசா இல்லாமல் கர்த்தாருக்கு பயணம் செய்யலாம் என்று கத்தார் சுற்றுலாத்துறை சேர்மன் ஹாசன் அல் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
திசு நானோ மாற்றியமைத்தல்; “டி.என்.டி” என அழைக்கப்படும், மனித உடலில் சேதமடைந்த உறுப்பை குணமாக்கி மீண்டும் செயல்;பட செய்யும் புதிய தொழில் நுட்பத்தை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கென்யா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மனித கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரித்து வருகிறது. இந்த எரிபொருள்கள் சமையல் செய்யவும், வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
லண்டனில் தபால் மற்றும் பார்சல்களை கொண்டு செல்லும் இரயில் சேவை 14 ஆண்டுகளுக்கு பிறகு மேம்படுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாண அரசு முன்னாள் ஜனாதிபதியான ஒபாமாவின் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
கனடா நாட்டின் தூதரக அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரானா சர்க்கார்  நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வடகொரியா, அமெரிக்காவின் பிராந்தியம் அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
தேசிய செய்திகள் :
‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ தொடங்கப்பட்டு 75வது ஆண்டு தினத்தையொட்டி, வலிமையான, மதச்சார்பற்ற, தன்னிறைவு பெற்ற, ஜனநாயக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மாநிலங்கள் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மாவட்ட ஆட்சியர்கள் அனைவரிடமும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊரையும் நேரில் சென்று பார்வையிட்டு குறைபாடுகளை தீர்க்க வேண்டும் என்றும் 2022ம் ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்க்கான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களுக்கு தடை விதித்தும் மாநில தேர்வு வாரியத்திறகு ஐகோர்டு உத்தரவிட்டுள்ளது
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகள் தங்களுக்கு தேவையான என்.சி.இ.ஆர்.;டி புத்தகங்களை வாங்குவதற்கு புதிய இணைய தளத்தை வெளியிட்டுள்ளது.
கொசுக்களை ஒழிக்க ‘ஆயில் உருண்டை’ வீசும் திட்டத்தை தமிழகத்தில் வேலூர் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக அஞ்சல் தினத்தை(அக்டோபர்; 09) முன்னிட்டு மாநிலம் முழுவதும் அஞ்சலக வளாகங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு அஞ்சல் துறை  நிர்ணயித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் கிராமங்களில் “தண்ணீர் சிக்கன விழிப்புணர்வு” ஏற்படுத்தி வரும் நடுப்படுகையை(கிராமம்) சேர்ந்த மாரியம்மாளுக்கு நபார்டு வங்கி தண்ணீர் தூதர் விருது வழங்கியுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் பரிசலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்:
சினாவில் நடந்து வரும் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டிக்கு இந்தியாவின் வர்தன் மற்றும் ஸ்ரீராம் முன்னேறியுள்ளனர்.
உலக தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் வான் நீகெர்க் தங்கப் பதக்கம் வென்றார்
உலக பாட்மிண்ட்ன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் 2வது சுற்றுக்கு நேரடி தகுதி பெற்றனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்; ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் பிரான்ஸ் வீரர்; அம்ப்ராய்ஸ் பாஸீ தங்கப்பதக்கம் வென்றார்.
முத்தரப்பு ஒரு நாள் போட்டித்தொடரின் பைனலில் தென் ஆப்பிரிக்கா அணியை, இந்தியா ஏ அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது
பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய தலைவராக நஜம் சேதி நியமிக்கப்பட்டுள்ளார்;.
5வது சீசன் புரோ கபடி போட்டியில் 20வது லீக் ஆட்டத்தில் பெங்களுர் புல்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது
வர்த்தக செய்திகள் :
தனியார் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 13.6 சதவீதம் அதிகரித்து ரூ.140.32 கோடியாக உள்ளது.
லாரி ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் ஈசி டிரக் (நயளலவசரஉம) என்ற பெயரில் புதிய  செயலியை (ஆப்) ஈசிவே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சரக்குகள் ஏற்றுமதி மற்றும் சேவை வரி உள்ளிட்டவற்றை அறியலாம்
தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க வேண்டும் எனில் ஏர் இந்தியாவின் சில கடன்களை தள்ளுபடி செய்யலாம் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார்
லெனோவா கே8 நோட் ஸ்மார்ட் போன் ஆகஸ்ட் 18ம் தேதி முதன் முதலாக இந்தியாவின் ஆன்லைன் வணிக தளமான அமேசானில் விற்பனை செய்யவுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் இனி மெசேஜ் அனுப்புவதைப் போல பணத்தையும் இன்ஸ்டன்ட் முறையில் அனுப்பும் புதிய சேவையை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த உணவகமான மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் சீனாவில் 2000 புதிய விடுதிகளை திறக்க உள்ளது.

Thursday, August 10, 2017

மிளகின் நன்மைகள்

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு.
மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு நல்ல நிவாரனி...

நம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!

நம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!
1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3)
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம் முதலில்
1.தமிழ் வருடங்கள்:-
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை
1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
2.அயணங்கள்:-
அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
3.ருதுக்கள்:-
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
4.மாஸங்கள்:-
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)2.வைகாசி(ரிஷபம்)3.ஆனி(மிதுனம்)4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)8.கார்த்திகை(விருச்சிகம்)9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)11.மாசி(கும்பம்)12.பங்குனி(மீனம்)
5.பக்ஷங்கள்:-
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்
6.திதிக்கள்:-
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை 2.துதியை 3.திருதியை 4.சதுர்த்தி 5.பஞ்சமி 6.ஷஷ்டி7.சப்தமி 8.அஷ்டமி 9.நவமி 10.தசமி 11.ஏகாதசி 12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
7.வாஸரங்கள்:-
வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
8.நட்சத்திரங்கள்:-
நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
9.கிரகங்கள்:-
கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)2.சந்திரன்(MOON)3.அங்காரகன்(MARS)4.புதன்(MERCURY)5.குரு(JUPITER)6.சுக்ரன்(VENUS)7.சனி(SATURN)8.இராகு(ASCENDING NODE)9.கேது(DESCENDING NODE)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-
இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும்,நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
11.நவரத்தினங்கள்:-
1.கோமேதகம் 2.நீலம் 3.பவளம் 4.புஷ்பராகம் 5.மரகதம் 6.மாணிக்கம் 7.முத்து 8.வைடூரியம் 9.வைரம்.
12.பூதங்கள்:-
பூதங்கள் ஐந்து வகைப்படும்
              பூதங்கள்
  தன்மாத்திரைகள்
   நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
13.மஹா பாதகங்கள்:-
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை 2.பொய் 3.களவு 4.கள் அருந்துதல் 5.குரு நிந்தை.
14.பேறுகள்
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ் 2.கல்வி 3.வலிமை 4.வெற்றி 5.நன்மக்கள் 6.பொன் 7.நெல் 8.நல்ஊழ் 9.நுகர்ச்சி 10.அறிவு 11.அழகு 12.பொறுமை 13.இளமை 14.துனிவு 15.நோயின்மை 16.வாழ்நாள்.
15.புராணங்கள்:-
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம் 2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம் 5.விஷ்ணு புராணம் 6.கருட புராணம் 7.அக்னி புராணம் 8.மத்ஸ்ய புராணம் 9.நாரத புராணம் 10.வராக புராணம் 11.வாமன புராணம் 12.கூர்ம புராணம் 13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம் 15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.
16.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.
இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது ஆகும்.